ஜனாதிபதி தேர்தல் நீதியான சுதந்திரமான ஒன்றல்ல என்ற முடிவிற்கு வரவேண்டி உள்ளது கபே

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
ஜனாதிபதி தேர்தல் நீதியான சுதந்திரமான ஒன்றல்ல என்ற முடிவிற்கு வரவேண்டி உள்ளது கபே:-
ஜனாதிபதி தேர்தல் நீதியான சுதந்திரமான ஒன்றல்ல என்ற முடிவிற்கு வரவேண்டி உள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது


ஜனவரி 8 ம்திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாரியளவில் அரசியல் உரிமைகள் மீறப்படுவது குறித்து கவலைகொண்டுள்ள கபே அமைப்பு இதன் காரணமாக இந்த தேர்தல் நீதியான, சுதந்திரமானவொன்றல்ல என கருதுகின்றது.

ஞாயிற்றுகிழமை அம்பாந்தோட்டையில் எதிர்கட்சி உறுப்பினர்களும், வீதிநாடக கலைஞர்களும் தாக்கப்பட்டவேளை அதனை தடுப்பதற்கு பொலிஸார் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.

தேர்தல்கள் என்பது அரசியல் உரிமையின் ஒரு பகுதி,என சுட்டிக்காட்டியுள்ள கபே அமைப்பின் நிறைவேற்று பணி;ப்பாளர் கீர்த்தி தென்னக்கோன்,ஓரு நிலைப்பாட்டை கொண்டிருப்பதற்கான உரிமை மற்றும்,கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம்,எதிரணி செயற் பாட்டாளர்களின் நடமாட்ட சுதந்திரம் என்பன மீறப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.வீதி நாடக கலைஞர்கள் பல அரசாங்கங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர், எனினும் அவர்கள் தாக்கப்பட்டது இதுவே முதல்தடவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிரணி உறுப்பினர்களின் அரசியல் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றன,இதனால் இந்த தேர்தல் சர்வதேச தராதரத்திலானதாக காணப்படவில்லை, தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று மோசடிகள் நடைபெற்றால் தான் பதவியை இராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.எனினும் தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் தினங்களில் பாரிய மோசடிகள் இடம் பெறுவதில்லை,அதற்கு முந்தைய தினங்களிலேயே வன்முறைகள் இடம் பெறுகின்றன என்பதை அவரிற்கு நாங்கள் நினைவுபடுத்த விரும்புகிறோம், என கபே குறிப்பிட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila