வடக்கு தொழிற்சாலைகளை மீள ஆரம்பிகுமாறு முதல்வர் வலியுறுத்தல்!

viknesh

“வடக்கு மாகா­ணத்­தில் இயங்­கிய பெரி­ய­ள­வி­லான தொழிற்­சா­லை­கள் இன்று மூடப்­பட்­டுள்­ள­தால் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வேலை­வாய்ப்­பின்றி உள்­ள­னர். எனவே அவற்றை மீள­வும் ஆரம்­பித்து உட­ன­டி­யாக வேலை­வாய்ப்பை வழங்க ஆவன செய்ய வேண்­டும்” இவ்­வாறு அரச தலை­வ­ரி­டம் நேரில் வலி­யு­றுத்­தி­னார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.
மாகாண முத­ல­மைச்­சர்­கள் மாநாடு வட மத்­திய மாகா­ணத்­தின் ஹப­ர­ணப் பகு­தி­யி­லுள்ள விருந்­தி­னர் விடு­தி­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை­யில் நேற்­று­ முன்­தி­னம் இடம்­பெற்­றது. இதில் முக்­கிய அமைச்­சர்­கள், அமைச்­சின் செய­லா­ளர்­கள் , அதி­கார சபை­க­ளின் தலை­வர்­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர். இதன்­போதே மேற்­படி கோரிக்­கையை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் முன்­வைத்­தார்.
“பரந்­தன் இர­சா­ய­னத் தொழிற்­சாலை , பரந்­தன் உப்­புக் கூட்­டுத் தாப­னம் , ஒட்­டு­சுட்­டான் ஓட்­டுத் தொழி­ல­கம் என்­பன இன்­று­வரை ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. அவற்­றில் பணி­யாற்­றிய பணி­யா­ளர்­கள் இன்று தொழில் வாய்ப்­பின்றி பெரும் சிர­மத்­தின் மத்­தி­யில் வாழ்­கின்­ற­னர். வறு­மை­யால் சிலர் இறந்­தும் விட்­ட­னர்.
அவர்­க­ளுக்­குக்­கூட மாற்று ஏற்­பா­டு­கள் கிடை­யாது. எனவே அந்­தத் தொழிற்­சா­லை­களை உட­ன­டி­யாக ஆரம்­பிப்­ப­தன் மூலம் பல நூற்­றுக்­க­ணக்­கா­ னோ­ருக்கு வேலை வாய்ப்பை வழங்க முடி­யும். அவற்றை மீள ஆரம்­பிக்க கொழும்பு அரசு ஆவன செய்ய வேண்­டும்.
பெரி­ய­ள­வி­லான தொழிற்­சா­லை­களை மீள இயக்­கு­வ­தில் கொழும்பு அர­சுக்கு நெருக்­கடி நில­மை­கள் காணப்­பட்­டால் அவற்­றுக்­கு­ரிய நிதியை வழங்கி, தொழிற்­சா­லை­களை வடக்கு மாகாண சபை­யி­டம் கைய­ளிக்க வேண்­டும்” என்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கோரிக்கை விடுத்­தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila