அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர், “இலங்கையில் அதிகளவில் சித்திரவதைகள் இடம்பெறும் ஜோசப் முகாமிற்கு எனது பிள்ளைகளுடன் என்னையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்.அந்த முகாமை நெருங்கிய உடன் எங்களுடைய கண்கள் கட்டப்பட்டு விட்டன. கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே நாங்கள் ஜோசப் முகாமுக்கு அழைத்து செல்லப்படுட்டோம். முகாமில் எங்களை தனி அறையில் நிறுத்தினார்கள். அதன் பின்னர் எங்களை வந்து சந்தித்த புலானாய்வு பிரிவின் உயர் அதிகாரி “எந்த நேரத்திலும் உங்களிடம் விசாரணை செய்யப்படலாம்” என கூறினார். நான் சாதாரண ஒரு குற்றவாளியாக அவர்களின் முன்னிலையில் கதைக்கவில்லை. அவர்களின் முன்னிலையில் நேராக தலையை உயர்த்தியே கதைத்தேன். இதன் போது விடுதலைப் புலிகளின் தலைவர் அண்ணன் பிரபாகரன் தொடர்பில் மீண்டும் மீண்டும் விசாரணை செய்தார்கள். எனக்கு தெரிந்த பதிலை கூறினேன். தெரியாததை தெரியாது என்றே கூறினேன். பின்னர் விசாரணை முடிந்ததாக கூறி என்னை பேருந்து ஒன்றில் ஏற்றி வந்து, வவுனியாவில் பொது மக்களோடு சேர்த்து விட்டார்கள்.அங்கு வைத்து எங்களை பதிவு செய்யும் போது நாங்கள் யார் என்பதை அறிந்து கொண்டதும் 500க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் எங்களை சூழ்ந்துகொண்டனர். அங்கிருந்து மீண்டும் இராமநாதபுரம் முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த முகாமில் வைத்து படையினரால் உயிர் அச்சுறுத்தலை நாங்கள் எதிர்நோக்கியிருந்தோம். நான் இராமநாதபுரம் முகாமில் தங்கியிருந்து போது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டுச் சென்ற கருணா என்னை வந்து சந்தித்தார். அதன் பின்னர் அவரை இதுவரையிலும் சந்திக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
ஜோசப் முகாம் சித்திரவதைக் கூடத்தை ஜெனிவாவில் அம்பலப்படுத்திய தமிழ்ச்செல்வனின் மனைவி!
Add Comments