போர் குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் தண்டிக்கப்போவதில்லை - முதலமைச்சா்.!

போர் குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் ஒருபோதும் தண்டிக்க மாட்டார்கள். மாறாக காப்பாற்றுவார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.  

ஐ.நா மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் போரில் பெரிதும் பாதி க்கப்பட்ட வடமாகாண தமிழ் மக்களு டைய பிரதி நிதியாக இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக்  கருதுகிறீர்கள்? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவி த்துள்ளாா். 

முதலமைச்சா் மேலும் தெரிவிக்கையில்...... 

போர்குற்றங்கள் செய்தவர்களை தண்டிப்பதாக இலங்கை அரசாங்கம் பசாங்கு செய்தாலும் உண்மையில் அவர்களை தண்டிக்காது. மாறாக அவர்களுக்கு மன்னிப்பு வழங்கும். 

இதற்கு சிறந்த உதாரணம் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என கேள்வி எழுப்பப்பட்டபோது காணாமல்போனவர்கள் இறந்திருக்கலாம் என வும், இறந்துவிட்டார்கள், எனவும் பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் இப்போது காணாமல்போனவர்களை கண்டறிவதற்காக அலுவலகம் ஒன்றை உருவாக்குகிறார்கள். 

ஆகவே ஒரு மக்கள் கூட்டத்திற்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டிக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும். அதனை இலங்கை அரசா ங்கம் ஒருபோதும் செய்யாது. அவர்கள் குற்றவாளிகளுக்காக பரிந்து பேசு வார்கள். 

அதுபோல் உள்நாட்டு விசாரணை என்பதும் குற்றவாளிகளை பாதுகாப்பத ற்கான விசாரணையாக இருக்குமே தவிர குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கான விசாரணையாக ஒருபோதும் அமையாது. எனவே நான் 2015ம் ஆண்டும், 2017ம் ஆண்டும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாள ருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். 

இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும்படி. அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்தபோதும் அதனையே கூறினேன். மேலும் இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளி ட்ட நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு கொண்டு வந்தது. 

அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணையை கொண்டு வந்ததாக பாசாங்கு செய்தாலும், உண்மையில் அவர்கள் பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே அந்த பிரேரணையை கொண்டுவந்தார்கள். அதாவது இலங்கைக்குள் சீனாவின் தலையீடு அதிகரித்தமை போன்ற பல்வேறு பூகோள நிலமைகளை கருத்தில் கொண்டே பிரேரணை கொண்டு வந்தார்கள். 

ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணை கொண்டுவந்தோம் என பாசாங்கு செய்தாலும் அவா்களுக்கு பொறுப்புள்ளது. ஆகவே இலங்கை தொடர்பாக சரியான தீர்மானம் எடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பிரேரணையை கொண்டு வந்த நாடுகள் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும். அதேபோல் மக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்துவதன் ஊடாக அழுத்த ங்களை கொடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila