ஜனாதிபதி தேர்தல் 2015: மலையகத்தின் களநிலவரம்

4 ஜனவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:29 ஜிஎம்டி
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கான காலக்கெடு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மத்தியில் மலையகப் பிரதேசங்களில் இருதரப்பும் உச்சகட்ட பிரசாரங்களில் இன்று ஈடுபட்டிருந்தன.
இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மத்திய, ஊவா மாகாணங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தது.
திடீர் திருப்பமாக அரசாங்கத்திலிருந்து அண்மையில் வெளியேறியிருந்த மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகள் தற்போது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வாக்கு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
மலையகத்தின் தோட்டப் புறங்களைச் சேர்ந்த மக்கள் இம்முறை தேர்தல் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதிக்கு மட்டுமல்லாது, மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் எதிர்கால அரசியலுக்கும் இம்முறை தேர்தல் முடிவுகள் முக்கியமானதாக அமையும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila