மாந்தை கிழக்கு துணுக்காய் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள் மற்றும் பிரதேச செயலர் திட்டமிடல் பிரிவு அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமம் ஒன்றுக்கு தலா 10 இலட்சம் வீதத்திற்கான வேலைத்திட்டத்திற்கான முன்மொழிவுகளை இறுதிப்படுத்தும் கூட்டங்கள் வடக்கில் சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் நடைபெறுகின்றன.
இத்திட்டங்கள் தொடர்பில் உள்ளூர் கிராம மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களின் கருத்துக்களை பெற்று கொள்ளாமல் ஒரு சிலரிடம் மாத்திரம் முன்மொழிவுகள் பெறப்பட்டு பிரதேச செயலகங்களில் அவற்றை இறுதி செய்யும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளன.
அரச அதிகாரிகளின் இது மாதிரியான நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் மேற்குறிப்பிட்ட கூட்டங்களில் கட்சி பிரமுகர்கள் அறிமுகப்படுத்தும் வேலைகளும் இடம்பெற்றுள்ளன.
முன்னர் ரிசாட்பதியுதீனின் இணைப்பாளரை தற்பொழுது ஐக்கிய தேசியக்கட்சியின் இணைப்பாளர் எனவும், மக்களினால் தெரிவு செய்யப்படாதவர்களை முன்னிலைப்படுத்தி கட்சிகளின் பிரதிநிதி அமைச்சர் சார்பாக என அறிமுக நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்திற்கு காரணமாக இருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கூட அழைக்காத நிலையில் அழையா விருந்தாளிகளாக செல்லும் நிலைமை மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.
திட்டங்களை மக்களிடம் திணிக்காமல் அவர்களின் கருத்துக்களுக்கேற்ப செயற்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டு கொண்டுள்ளார். கடந்த காலங்களில் சில அரசாங்கத்திற்கு சார்பாக இயங்கியவர்களால் மக்கள் பெருமளவில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டார்கள்.
இப்பொழுது அவர்களே புதிய முகமூடிகளுடன் மக்கள் முன் வந்திருக்கின்றார்கள் இதன் காரணமாக மீண்டும் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமம் ஒன்றுக்கு தலா 10 இலட்சம் வீதத்திற்கான வேலைத்திட்டத்திற்கான முன்மொழிவுகளை இறுதிப்படுத்தும் கூட்டங்கள் வடக்கில் சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் நடைபெறுகின்றன.
இத்திட்டங்கள் தொடர்பில் உள்ளூர் கிராம மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களின் கருத்துக்களை பெற்று கொள்ளாமல் ஒரு சிலரிடம் மாத்திரம் முன்மொழிவுகள் பெறப்பட்டு பிரதேச செயலகங்களில் அவற்றை இறுதி செய்யும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளன.
அரச அதிகாரிகளின் இது மாதிரியான நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் மேற்குறிப்பிட்ட கூட்டங்களில் கட்சி பிரமுகர்கள் அறிமுகப்படுத்தும் வேலைகளும் இடம்பெற்றுள்ளன.
முன்னர் ரிசாட்பதியுதீனின் இணைப்பாளரை தற்பொழுது ஐக்கிய தேசியக்கட்சியின் இணைப்பாளர் எனவும், மக்களினால் தெரிவு செய்யப்படாதவர்களை முன்னிலைப்படுத்தி கட்சிகளின் பிரதிநிதி அமைச்சர் சார்பாக என அறிமுக நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்திற்கு காரணமாக இருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கூட அழைக்காத நிலையில் அழையா விருந்தாளிகளாக செல்லும் நிலைமை மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.
திட்டங்களை மக்களிடம் திணிக்காமல் அவர்களின் கருத்துக்களுக்கேற்ப செயற்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டு கொண்டுள்ளார். கடந்த காலங்களில் சில அரசாங்கத்திற்கு சார்பாக இயங்கியவர்களால் மக்கள் பெருமளவில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டார்கள்.
இப்பொழுது அவர்களே புதிய முகமூடிகளுடன் மக்கள் முன் வந்திருக்கின்றார்கள் இதன் காரணமாக மீண்டும் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.