வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி நீதிபதிகளுக்கு அல்ல!

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பொறிமுறையின்போது வெளிநாடுகளின் தொழில்நுட்ப உதவிகளையும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
எனினும் வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமரிக்காவின் தெற்காசிய உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே சரத் பொன்சேகாவின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டையும் சரத் பொன்சேகா மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila