சம்பவ இடத்தில் மயங்கிவிழுந்த முன்னாள் போராளியொருவர் அதேயிடத்தில் மரணம்!

சம்பவ இடத்தில் மயங்கிவிழுந்த முன்னாள் போராளியொருவர் அதேயிடத்தில் மரணம்!

முன்னாள் போராளியான குளவிசுட்டான் – நெடுங்கேணியைச் சொந்த இடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஆசீர்வாதம் ஸ் ரீபன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி திடீரென மயங்கிவிழுந்து அதேயிடத்தில் மரணமடைந்துள்ளார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை புளியங்குளம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து இரண்டு வருடங்கள் புனர்வாழ்வுபெற்ற பின்னர் விடுதலைசெய்யப்பட்டார்.
இவர், சமூகத்துடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் நேற்றைய தினம் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
இவரின் உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது இறுதிக் கிரியைகள் குளவிசுட்டானில் நடைபெற்று யாழ்ப்பாணம் – நீர்வேலி இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila