2009 ஜனவரி 11ம் திகதி லோகநாதன் மற்றும் ரத்னசுவாமி ஆகிய இருவரும் வத்தளையில் கடற்படையினரால் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட இரண்டு தமிழர்கள் பயணித்த வாகனத்தின் பாகங்கள் வெலிசற கடற்படை முகாமில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. எனினும் கடத்தப்பட்ட லோகநாதனின் மனைவியிடம் வாக்குமூலத்தை பெறுவதற்கு அந்நாள்பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த இரண்டு தமிழர்களையும் கடத்திய கடற்படை அதிகாரியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறையினர் கடற்படை தளபதிக்கு கடிதம் அனுப்பியுள்ள போதிலும் குறித்த அதிகாரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. |
ஆட்கடத்தலில் ஈடுபட்ட கடற்படை அதிகாரியை காப்பாற்ற முயற்சிக்கும் கடற்படைத் தளபதி!
Related Post:
Add Comments