இன்று யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கவுள்ள 300 பிக்குகள்!


நாவற்குழியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையில் விசேட வழிபாடுகளை நடத்துவதற்காக  தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியமர்ந்துள்ளனர். அவர்கள் வாழும் பிரதேசத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
நாவற்குழியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையில் விசேட வழிபாடுகளை நடத்துவதற்காக தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியமர்ந்துள்ளனர். அவர்கள் வாழும் பிரதேசத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
           
குறித்த விகாரை சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்படாமல் கட்டட வேலைகள் நடைபெற்றதனை அடுத்து பிரதேச செயலரினால் கட்டட வேலைகளை உடன் நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள 300க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாவற்குழியில் விகாரை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் கிழக்கு மற்றும் தென் பகுதியில் பௌத்த பிக்குகள் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் , இன்று யாழ்ப்பாணத்திற்கு 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila