விநாயகர் அருள் கொள்ளும் திருநாள்

தமிழ் வரு­டப்­பி­றப்­பின் முதல் மாத­மான சித்­தி­ரையை சிறப்­பா­கக் கொண்­டா­டு­வது போலவே வரு­டத்­தின் ஐந்­தா­வது மாத­மான ஆவ­ணி­யில் வரு­கின்ற விநா­ய­க­ ச­துர்த்தி விழாவை இந்­துக்­கள் பக்­தி ­பூர்­வ­மாகக் கொண்­டாடி வருகின்றனர்.
சிறப்பு
இந்­தத் திரு­நா­ளில் விநாயகப்பெருமான் அடி­ய­வர்­கள் அதி­கா­லை­யி­லேயே எழுந்து நீராடி, வீட்­டைக் கழுவி சுத்­தம் செய்­வர். வாச­லிலே கோல­மி­டு­வர். மாவிலை, தோர­ணம், தென்­னங்­கு­ருத்து வாழை கொண்டு ஆல­யத்­தை­யும், வீடு­க­ளை­யும் அலங்­க­ரிப்­பர்.
களி­மண்­ணால் செய்த புதுப் பிள்­ளை­யாரை பூஜை அறை­யில் உள்ள மரப் பீடத்­தில வைத்து மலர் மாலை­கள், நகைகள் அணி­வித்து அலங்­கா­ரம் செய்து வழி­பாடு இயற்­று­வர். இந்த மரபு இந்து மக்­க­ளி­டையே தொடர்­புற்று இன்றும் நிலவி வரு­கி­றது.
அவ­தா­ரம்
விநா­ய­கப் பெரு­மா­னின் அவ­தா­ரம் குறித்துப் பல கதை­கள் பேசப்­ப­டு­கின்­றன. அவற்­றுள் யானை­மு­கம் பெற்ற கதை அற்­பு­த­மா­னது. அருள் விற்­பன்­ன­மா­னது.
கஜ­மு­கா­சு­ரன் என்ற ஒரு கொடிய அரக்­கன் இருந்­தான். அவன் மாகத முனி­வ­ருக்­கும்,வீபூதி பெற்ற அசுர மாதுக்­கும் பிறந்­த­வன். சிவ­பெ­ரு­மானை நோக்­கிப் பல்­லாண்டு காலம் தவம் புரிந்­தான்.
அதன் பயன் கொண்டு சிவப் பரம்­பொ­ரு­ளின் அருட்­காட்­சியை கண்­டு­ கொண்­டான். அந்த சந்­தர்ப்­பத்­திலே சிவபெருமான் கஜ­மு­கா­சு­ரனை நோக்கி, “உனக்கு என்ன வரம் வேண்­டும்..?” என்­று­ கேட்­டார்.
இறை­ய­ருள் வரம்
கஜ­மு­கா­சு­ரன் பதி­லு­ரைத்­தான், “எனை­யா­ளும் பரம்­பொ­ருளே….! தேவ­ரும்,மூவ­ரும் எனக்கு அடங்­கி­யி­ருக்க வேண்டும். எல்­லோ­ரை­யும் வெற்­றி­ கொள்­ளும் வீர­மும் வலி­மை­யும்,சாவு இல்­லாத தகை­மை­யும் வேண்­டும்.” என்று விழித்­தான்.
இறை­வ­ரம் தனை தான் விரும்­பிய விதமே பெற்­றான்.வரத்­தைப் பெற்­றுக்­கொண்­ட­வன் அமை­தி­யாக இருக்கவில்லை. மிகுந்­த­செ­ருக்­கு­டன் தேவர்­க­ளை­யும், முனி­வர்­க­ளை­யும் துன்­பு­றுத்­தி­னான்.
அவர்­களை வன்ம எண்­ணங்­கொண்டு அடக்­கி­னான். மால­யா­னதி வான­வர்­க­ளைப் பிடித்து இழுத்­துக் கொண்டு வருமாறு கட்­ட­ளை­யிட்­டான். அவ­னு­டைய ஏவ­லர்­க­ளும் கட்­ட­ளைக்­குப் பணிந்­த­னர். திரு­மால், திசை­மு­கன், இந்திரன் முத­லிய இமை­யோர்­களை ஆர்த்து ஈர்த்து வந்­தார்­கள்.
துன்ப மிகுதி
மனம் பூரித்து உள மகிழ்ந்­தான் கஜ­மு­கா­சு­ரன். அவர்­களை நோக்கி, “ஏ தேவர்­களே…! நீங்­கள் என்­முன் இரு காதுகளை­யும் பிடித்­துக் கொண்டு அனு­தி­ன­மும் காலை,உச்சி மாலை என மூ வேளை­யி­லும் 1008 தோப்­புக் கர­ணம் போட வேண்­டும்” என்று கட்­ட­ளை­யிட்­டான்.
தேவர்­கள் அச்­சம் கொண்­ட­னர்.கட்­ட­ளைப்­ப­டியே மூ வேளை­யும் 1008 தோப்­புக்­க­ர­ணங்­களைப் போட்­ட­னர். களைப்படைந்து அயர்ந்து போயி­னர். மிக மனம் வருந்தி வாடி­னர். துயர மிகு­தி­யால் திருக்­க­யிலை மலை சென்று சிவ­பெ­ரு­மானை வணங்­கி­னர்.
அருட்­பெ­ருங்­க­டலே கஜ­மு­கா­சு­ர­னு­டைய கொடு­மை­யால் நாங்­கள் அதிக துன்­பங்­களை அனு­ப­வித்­து­ விட்­டோம். எங்க­ளைக் காத்­த­ருள வேண்­டும். அதுவே தேவ­ரீ­ரது கடன் என்று முறை­யிட்­ட­னர்.
இனி­யும் எம்­மால் இத்­தகு துய­ரங்­க­ளைத் தாங்க இய­லாது. எமைக் காத்­த­ரு­ளீர் என அவன் தாழ் பணிந்து வேண்டினர். கயிலை நாதர் வேண்­டு­தலை ஏற்­றார். கருணை புரிந்­தார்.
காத்­த­ரு­ளல்
தனக்கு அரு­கா­மை­யில் வீற்­றி­ருந்த விநா­ய­கப் பெரு­மா­னைக் கடைக் கண்­ணால் பார்த்­த­ரு­ளி­னார். விநா­ய­கரை யானை முகத்­தோ­டும், மனித உட­லோ­டும் தோற்­று­வித்து கஜ­மு­கா­சு­ரனை அழித்து வரும்­படி அனுப்­பி­ வைத்­தார்.
விநா­ய­கப் பெரு­மான் மணித் ­தேர்­ மீது ஆரோ­க­ணித்­தார். வில்,வாள் முத­லிய படைக்­க­லங்­க­ளைத் தரித்­த­படி பூத கணங்­கள் புடை­சூ­ழப் போருக்­குப் புறப்­பட்­டார். போர்ப் பறை­கள் முழங்­கின. வான­வர்­கள் மகிழ்ந்­த­னர்.
விண்­ணும் மண்­ணும் அதிர்ந்­தன. பூத கணங்­க­ளும்,அசுர கணங்­க­ளும் போர் புரிந்­தன. இறு­தி­யில் விநா­ய­கப் பெருமான் கஜ­மு­கா­சு­ர­னோடு கடும்­போர் புரிந்­தார்.
விநா­ய­கர் ஏவிய கணை­கள் யாவும் கஜ­மு­கன் மீது வீழ்ந்­தன. பாறை­யில் வீழ்ந்த மழைத்­து­ளி­கள் போல கூர் மழுங்கின.
இந்த சந்­தர்ப்­பத்­திலே “கஜ­மு­கா­சு­ரனை எப்­ப­டை­க­ளா­லும் அழிக்க முடி­யாது. அவன் அழி­யாத மாயா­வ­ரம் பெற்றவன்” என்ற அச­ரீதி எழுந்­தது. மாயா­வ­ரம் பெற்ற இவனை தந்­தத்­தால் அழிப்­பேன் என விநாய­கர் திரு­வு­ளம் கொண்­டார்.
தமது திரு­மு­கத்­தில் உள்ள வலக்­கொம்பை முறித்­தார். சிவ­மந்­தி­ரத்தை உச்­ச­ரித்­த­படி கொம்பை ஏவி­னார். ஞான வடிவான தந்­தம் கஜ­மு­கா­சு­ர­னைப் பிளந்­தது.
மாயா­வ­ரம் பெற்ற கஜ­மு­கா­சு­ரன் பெருச்­சாளி வடி­வம் பெற்­றான். விநா­ய­கரை எதிர்த்து மீண்­டும் போர் புரிய வந்­தான். விநா­ய­கர் கரு­ணை ­கூர்ந்­தார். திருக்­காட்சி கொடுத்­தார். அவ­னு­டைய அறி­யாமை அகன்­றிட மெய்­யு­ணர்வு பெற்றான். விநா­ய­கரை வணங்கி நின்­றான்.
அந்த மூஷி­கத்தை விநா­ய­கர் தனது வாக­ன­மா­கக் கொண்­ட­ரு­ளி­னார். வான­வர்­கள் மலர் மழை பொழிந்­த­னர். விநா­ய­க­ரைப் போற்றி வணங்­கி­னர்.
அருள் உய்ந்து வாழ்வு தரல்
விநா­ய­கர் மால­ய­னாதி வான­வர்­களை நோக்­கி­னார், “உமக்கு என்ன வரம் வேண்­டும். கேளுங்­கள்..?” என்று கூறி­னார். அருள் இன்­பம் அளித்­தார்.
தேவர்­கள் “ஆனை முகத்து அண்­ணலே நாங்­கள் இத்­தனை காலம் கஜ­மு­கா­சு­ர­னுக்­குக் காலை,உச்சி. மாலை என மூவேளை­யும் ஆயி­ரத் தெட்­டுத் தோப்­புக்­க­ர­ணங்­கள் போட்­டோம். இனித் தேவ­ரீர் முன் அத­னைச் செய்ய அருள்­புரிக என்­ற­னர்.
விநா­ய­கப் பெரு­மான் புன்­மு­று­வல் பூத்­தார்.பின்பு, “மூன்று முறை தோப்­புக்­க­ர­ணம் இட்­டால் போதும்” எனக் கூறி அருள் உவந்­தார். அன்­று ­தொட்டு அம­ரர்­க­ளும்,அடி­யார்­க­ளும் அந்­தப் பெரு­மா­னு­டைய திரு­மு­கப் பொலி­வின் முன்பாக நின்று தோப்­புக்­க­ர­ணம் இட்டு வழி­பாடு செய்­து ­வ­ர­லா­யி­னர்.
விநா­ய­க­ரது திரு­வு­ரு­வம் முன்­பாக தோப்­புக்­க­ர­ணம் இடு­வ­த­னால் அறிவு வளர்ச்­சி­யும், உடல் உள நல­மும் உண்டாகும். அவ­ரு­டயை பெருங்­க­ரு­ணைக்கு உரி­ய­வர்­க­ளாக விளங்­கு­வர்.
ஆக,இத்­தகு மகத்­து­வம் நிறைந்த ஆவ­ணிச் சதுர்த்­தித் திரு­நா­ளிலே அவ­தா­ரம்­ கொண்ட விநா­ய­கப் பெரு­மானை வழி­பாடு இயற்­று­வோம். சகல ஐஸ்­வ­ரி­யச் சிறப்­புக்­க­ளை­யும் பெற்று இன்­ப­மாக வாழ்­வோம்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila