வடமாகாண சபையில் முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அதனையடுத்து ஏற்பட்ட மக்கள் எழுச்சிகாரணமாக சேதடைந்திருக்கும் தமிழரசை சீர்செய்ய மீண்டும் வெள்ளையடிப்புக்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.அவ்வகையினில் அதற்கொன பொறுப்பையேற்றுள்ள சீ.வி.கே.சிவஞானம் குழப்ப நிலைகளை ஒட்டு மொத்தமாக நாம் எடுத்து நோக்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான சதி வேலைகள் தான் நடந்தேறியுள்ளது. இந்தக் குழப்ப நிலைகளுக்கு மத்திய அரசு தான் காரணமெனக் கூறி விட முடியாது. ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குச் சார்பான எதிரணி மீதும் எனக்குச் சந்தேகமுள்ளதாக புதிய கதையினை அவிழ்த்துவிட்டுள்ளார்.
அத்துடன் அவர் அளித்துள்ள புதிய வியாக்கியானத்தினில் இவ்வாறான குழப்ப நிலைமைகளுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று கூறுவதை விட தெற்கு அரசியலில் செல்வாக்குச் செலுத்துவோரதும், வெளிநாட்டிலுள்ள சிலரதும் திட்டமிட்ட செயற்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக மக்கள் எழுச்சியால் முதலமைச்சர் கதிரையினில் சி.வி.விக்கினேஸ்வரன் தொடர பேரவை தலைவர் பதவியிலிருந்து சீ.வி.கே.சிவஞானத்தினை தூக்கியடிக்க முயற்சிகள் நடந்தன.இந்நிலையினில் தமது காலில் வீழ்ந்த அவர் தனது பதவியினை காப்பாற்ற கோரியதாக அனந்தி சசிதரன் பின்னர் ஊடகங்களிற்கு தெரிவித்திருந்தார்.அத்துடன் தனக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானங்கொண்டுரப்பட்டால் மஹிந்த தரப்பு சிங்கள மாகாணசபை உறுப்பினர்களது வாக்குகள் மூலம் பதவியை தன்னால் தக்கவைக்கமுடியுமெனவும் அப்போது அவர் சவால்விடுத்ததாக இச்சந்திப்பினில் கலந்துகொண்ட மற்றொரு மாகாணசபை உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இந்நிலையினில் மக்களது நிராகரிப்பினையடுத்து தான சுயவிருப்பினில் முதலமைச்சர் பதவியை கவிழ்க்க முற்படவில்லையென தன்னிலை விளக்கமளித்திருந்தார்.இதன் தொடர்ச்சியாக சுமந்திரன் ஆதரவு அணி அவைத்தலைவர் பதவியிலிருந்து சீ.வி.கே.சிவஞானத்தை விரட்ட மீண்டும் சதியினில் குதித்திருந்தது தெரிந்ததே.
Add Comments