கொள்ளையர் கைது - மோட்டார்சைக்கிள், தொலைபேசிகள் மீட்பு

வீதியில் தனியாக துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் பெண்களின் கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசிகளினை தொடர்ச்சியாக கொள்ளையடித்தவர் எனும் குற்றச்சாட்டில்  தச்சன்தோப்பு கைதடி பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் சாவகச்சேரி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது குறித்த நபரிடமிருந்து நவீன கையடக்க தொலைபேசி உட்பட 18 தொலைபேசிகளும் , 19000/- வரையான பணமும் , பெண்களின் கைகடிகாரம் 02 , வங்கி புத்தகம் 06 , தே.அ.அட்டை 03 , சாரதி அனுமதி பத்திரம் 01 , பெண்களின் கை பை 04 என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் கௌள்ளையடிக்க பயன்படுத்திய 02 மோட்டார் சைக்கிள்களும்  கைப்பற்றப்பட்டன. 

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் உரிமையாளர்கள் தமது தொலைபேசி மற்றும்  உடமைகளினை அடையாளம் காட்ட முடியுமாயின் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பெரும் குற்ற பிரிவிற்கு வந்து அடையாளம் காட்டுமாறு பொலிசார் கேட்டு கொள்கின்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila