கதிர்காம தேவாலய பஸ்நாயக்க பதவிக்கு கடும் போட்டி: 18 பேர் களத்தில்

கதிர்காம தேவாலய பஸ்நாயக்க பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.
இதுவரை காலமும் தேவாலய பஸ்நாயக்க நிலமே பதவியில் இருந்த சஷீந்திர ராஜபக்ஷ, அரசாங்க மாற்றத்தின் பின்னர் தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தார்.
இதன் காரணமாக தற்போது கதிர்காம பஸ்நாயக்க நிலமே பதவி வெற்றிடமாக உள்ளது.
இந்நிலையில் இந்தப் பதவியை கைப்பற்றும் நோக்கில் தற்போது சுமார் 18 பேர் களத்தில் இறங்கியுள்ளனர்.
இதன் காரணமாக எதிர்வரும் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையே கதிர்காம தேவாலயம் அருகில் இருந்த மரமொன்றில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டதையடுத்து, தேவாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila