கடந்த 9ம் திகதி காலையில், அலரி மாளிகையில் இருந்து வெளியேற மஹிந்த ராஜபக்ச முடிவெடுத்த போதே, மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதியாயிற்று. உடனடியாகவே புதுடில்லியில் இருந்து ஜனாதிபதி செயலகம் மூலம் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.
டுவிட்டரிலும் வாழ்த்தை பதிவு செய்த அவர் பின்னர், நேரடியாகவே மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அதையடுத்து, வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் மைத்திரிபால சிறிசேனவுக்கு கொடுத்தனுப்பிய, நரேந்திர மோடி, இந்தியா வருமாறும் அழைப்பு விடுத்தார்.
இந்த மாதமே மைத்திரிபால சிறிசேனவை புதுடில்லி வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் நரேந்திர மோடி. ஆனால், பாப்பரசரின் பயணம் மற்றும், உள்நாட்டு நிர்வாகச் சீரமைப்புகளைக் கவனிக்க வேண்டிய நெருக்கடிகள் காரணமாக, அடுத்த மாத ஆரம்பத்தில் புதுடில்லி வருவதாக உறுதியளித்திருந்தார் மைத்திரிபால சிறிசேன.
அடுத்த மாத ஆரம்பத்தில், மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான கால அட்டவணையை தயாரிக்கும் பணி இருதரப்பு அதிகாரிகளாலும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிகிறது. அதற்கிடையில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதும் அவரை முதலாவதாகச் சென்று பூச்செண்டு கொடுத்து வாழ்த்துக் கூறியது, இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தான்.
அதுமட்டுமன்றி, கடந்த 13ம் திகதி மாலையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற, இரண்டே மணி நேரத்தில் புதிய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீரவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்தது.
மங்கள சமரவீரவுக்கு வாழ்த்துக் கூறிய அவர், புதுடில்லி வருமாறும் அழைப்பு விடுத்தார். மறுநாள் காலையிலேயே, 18ம் திகதி (இன்று) புதுடில்லி வருவதாக பதில் அனுப்பினார் மங்கள சமரவீர.
இந்த நிகழ்வுகள் அனைத்துமே, இலங்கை விவகாரத்தில் இந்தியா அவசரமாக காய்களை நகர்த்தி வருவதை தெளிவாகவே உணர்த்தியிருக்கிறது.
மஹிந்த ராஜபக்சவின் தோல்வி புதுடில்லியை நிம்மதி கொள்ள வைத்திருப்பதாகவும், அங்குள்ள அதிகாரிகளின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்திருப்பதாகவும், இந்தியாவின் ஊடகங்கள் பலவும் குறிப்பிட்டன. கடந்த பல ஆண்டுகளாகவே மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நகர்வுகள் இந்தியாவுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கவில்லை.
இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றத் தவறியது மட் டுமன்றி, சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதனை வைத்தே, இந்தியாவுக்கு எதிரான காய்நகர்த்தலுக்
கும் பயன்படுத்தி வந்தார் மஹிந்த ராஜபக்ச.
இதனால் இந்தியா அவரைக் கையாள்வதில் பல சமயங்களில் குழம்பிப் போனது. இந்தநிலையில் தான், மஹிந்த ராஜபக்சவின் தோல்வியை இந்தியா மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறது. அதுமட்டுமன்றி, மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில், ஏற்பட்டு விட்ட இடைவெளியை கூடிய விரைவில் சரி செய்து விட வேண்டும் என்ற அவசரத்தையும் இந்தியாவிடம் கவனிக்க முடிகிறது.
மஹிந்த ராஜபக்சவின் தோல்வியை, இந்தியாவுக்காக திறந்து விடப்பட்ட சாதகமானதொரு சாளரமாக சர்வதேச ஆய்வாளர்கள் பலரும் கருதுகின்றனர். இன்று புதுடில்லிக்குச் செல்லும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுஷ்மா சுவராஜுடன் நடத்தவுள்ள பேச்சுக்களின் போது, இந்தியா அந்த இடைவெளியை நிரப்ப முனையலாம்.
ஆனாலும் சில விடயங்களில், இருதரப்பு உறவுகள் விடயத்தில் சிக்கல்கள் நீடிக்கவே செய்யும் போலத் தோன்றுகிறது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாராக இருப்பதாக இந்தியாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதனை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தாலும், மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அதற்குப் பிடி கொடுக்காமலே காலம் கடத்தி வந்தது. புதிய அரசாங்கத்திடம் இருந்து இந்தியா அதனையே எதிர்பார்த்திருந்தாலும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அதைச் செய்வதில் பலத்த சவால்கள் உள்ளன.
மாகாணசபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்த ஜாதிக ஹெல உறுமய ஒருபோதும் இணங்காது. அதைவிட, 100 நாள் செயற்றிட்டத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து கவனம் செலுத்தப்படாது என்று முன்னரே கூறியிருந்தார் மைத்திரிபால சிறிசேன.
எனவே உடனடியாக இலங்கை அரசிடம் இதனை வலியுறுத்தாது போனாலும், காலப் போக்கில் அதனை இந்தியா எதிர்பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகையதொரு கட்டத்தில், இலங்கை இந்தியாவின் அழுத்தங்களுக்கு உட்பட நேரிடலாம்.
ஆனால், அதற்கிடையில், இலங்கையுடனான உறவுகளைப் பலப்படுத்துவதில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை எட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள இந்தியா தீவிர அக்கறை செலுத்தி வரும் நிலையில், சீனாவும் தனது பக்கத்தில் இருந்து சாதகமான சமிக்ஞைகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, சீனப் பிரதமர் லீ கெகியாங்கும் அனுப்பிய வாழ்த்துச் செய்திகளில், இலங்கையுடனான உறவுகள் தொடர்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரும், இலங்கையில் சீனாவின் முதலீடுகள், திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்குக் காரணம், சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும், கொழும்பு துறைமுக நகர திட்டத்தை ரத்துச் செய்யப் போவதாக, ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தது தான். புதிய அரசாங்கம், பதவிக்கு வர முன்னரே, சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட சட்டவிரோதமான உடன்பாடுகள் ரத்துச் செய்யப்படும் என்று எதிரணித் தலைவர்கள் கூறியிருந்தனர்.
இலங்கையில் சீனா முதலீடு செய்துள்ள தொகை ஒன்றும் சாதாரணமானதல்ல. இந்த முதலீட்டு உடன்பாடுகளை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டால், சீனாவுக்கு அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
அந்த நெருக்கடி பொருளாதார ரீதியானதல்ல. சீனாவைப் பொறுத்தவரையில் இந்த தொகை வெறும் துரும்புக்கு ஒப்பானது. சீனா எதிர்பார்ப்பது இந்த திட்டங்களின் மூலம் இலங்கையில் தனது செல்வாக்கை பலப்படுத்திக் கொள்வதாகும்.
இந்தியப் பெருங்கடலில் மாத்திரமன்றி, அதற்கு அப்பாலும், ஐரோப்பா, ஆபிரிக்காவுடன் தொடர்புகளைப் பேணும் திட்டத்துக்கும், இலங்கையை முதன்மையான தங்கு நாடாக வைத்திருக்க முயன்றது சீனா.
அத்தகைய திட்டங்கள் அனைத்துக்கும் தலையாட்டும் பொம்மையாகவே மஹிந்த ராஜபக்ச இருந்து வந்தார்.
இத்தகைய முக்கியமானதொரு கட்டத்தில் மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தை இழப்பார் என்று சீனா கனவில் கூட நினைத்திருக்கவில்லை. அதனால் தான், சீனாவுக்கு இது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மஹிந்த ராஜபக்சவின் தோல்வி, சீனாவுக்கு பெரும் ஏமாற்றம், அதன் திட்டங்களுக்கு பின்னடைவு என்றே உலகளாவிய ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும், பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்து சீனாவுக்கு சற்று நம்பிகையளித்திருக்கும்.
சீனாவுடனான உறவுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும், சீனாவின் முதலீடுகளை இலங்கை வரவேற்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அவரே முன்னர், சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட முறையற்ற உடன்பாடுகள் ரத்துச் செய்யப்படும் என்று கூறியவர்.
ஆனால் பதவிக்கு வந்ததும், அவரது நிலைப்பாடு சற்று மாறியிருப்பதாகத் தெரிகிறது. சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் அதன் முதலீடுகள் ரத்துச் செய்யப்பட்டால், அதற்குப் பெரும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படாது.
இலங்கையைப் பொறுத்தவரையில் சீனாவின் முதலீடுகள் மிகப் பெரிய தொகை. இதனை முழுமையாக இழப்பதற்கு புதிய அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது. ஏனென்றால், அது புதிய அரசாங்கத்தின் மீதிருக்கும் மக்களின் நம்பிக்கையையும் பாழ்படுத்தி விடும்.
எனவே சீன விவகாரத்தில் இலங்கையின் புதிய அரசாங்கம் கொஞ்சம் பொறுமையாக, அவதானமாகவே முடிவுகளை எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தரக் கூடிய விவகாரமாக இருக்காவிடினும், நீர் மூழ்கிகளின் வருகை போன்ற ஆபத்தான விவகாரங்களில் சீனாவுக்கு இனிமேல் இலங்கை ஒத்துழைக்காது என்பதையிட்டு அது ஆறுதல் கொள்ளலாம்.
ஹரிகரன்
டுவிட்டரிலும் வாழ்த்தை பதிவு செய்த அவர் பின்னர், நேரடியாகவே மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அதையடுத்து, வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் மைத்திரிபால சிறிசேனவுக்கு கொடுத்தனுப்பிய, நரேந்திர மோடி, இந்தியா வருமாறும் அழைப்பு விடுத்தார்.
இந்த மாதமே மைத்திரிபால சிறிசேனவை புதுடில்லி வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் நரேந்திர மோடி. ஆனால், பாப்பரசரின் பயணம் மற்றும், உள்நாட்டு நிர்வாகச் சீரமைப்புகளைக் கவனிக்க வேண்டிய நெருக்கடிகள் காரணமாக, அடுத்த மாத ஆரம்பத்தில் புதுடில்லி வருவதாக உறுதியளித்திருந்தார் மைத்திரிபால சிறிசேன.
அடுத்த மாத ஆரம்பத்தில், மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான கால அட்டவணையை தயாரிக்கும் பணி இருதரப்பு அதிகாரிகளாலும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிகிறது. அதற்கிடையில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதும் அவரை முதலாவதாகச் சென்று பூச்செண்டு கொடுத்து வாழ்த்துக் கூறியது, இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தான்.
அதுமட்டுமன்றி, கடந்த 13ம் திகதி மாலையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற, இரண்டே மணி நேரத்தில் புதிய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீரவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் இருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்தது.
மங்கள சமரவீரவுக்கு வாழ்த்துக் கூறிய அவர், புதுடில்லி வருமாறும் அழைப்பு விடுத்தார். மறுநாள் காலையிலேயே, 18ம் திகதி (இன்று) புதுடில்லி வருவதாக பதில் அனுப்பினார் மங்கள சமரவீர.
இந்த நிகழ்வுகள் அனைத்துமே, இலங்கை விவகாரத்தில் இந்தியா அவசரமாக காய்களை நகர்த்தி வருவதை தெளிவாகவே உணர்த்தியிருக்கிறது.
மஹிந்த ராஜபக்சவின் தோல்வி புதுடில்லியை நிம்மதி கொள்ள வைத்திருப்பதாகவும், அங்குள்ள அதிகாரிகளின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்திருப்பதாகவும், இந்தியாவின் ஊடகங்கள் பலவும் குறிப்பிட்டன. கடந்த பல ஆண்டுகளாகவே மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நகர்வுகள் இந்தியாவுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கவில்லை.
இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றத் தவறியது மட் டுமன்றி, சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதனை வைத்தே, இந்தியாவுக்கு எதிரான காய்நகர்த்தலுக்
கும் பயன்படுத்தி வந்தார் மஹிந்த ராஜபக்ச.
இதனால் இந்தியா அவரைக் கையாள்வதில் பல சமயங்களில் குழம்பிப் போனது. இந்தநிலையில் தான், மஹிந்த ராஜபக்சவின் தோல்வியை இந்தியா மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறது. அதுமட்டுமன்றி, மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில், ஏற்பட்டு விட்ட இடைவெளியை கூடிய விரைவில் சரி செய்து விட வேண்டும் என்ற அவசரத்தையும் இந்தியாவிடம் கவனிக்க முடிகிறது.
மஹிந்த ராஜபக்சவின் தோல்வியை, இந்தியாவுக்காக திறந்து விடப்பட்ட சாதகமானதொரு சாளரமாக சர்வதேச ஆய்வாளர்கள் பலரும் கருதுகின்றனர். இன்று புதுடில்லிக்குச் செல்லும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுஷ்மா சுவராஜுடன் நடத்தவுள்ள பேச்சுக்களின் போது, இந்தியா அந்த இடைவெளியை நிரப்ப முனையலாம்.
ஆனாலும் சில விடயங்களில், இருதரப்பு உறவுகள் விடயத்தில் சிக்கல்கள் நீடிக்கவே செய்யும் போலத் தோன்றுகிறது. மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாராக இருப்பதாக இந்தியாவுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதனை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தாலும், மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அதற்குப் பிடி கொடுக்காமலே காலம் கடத்தி வந்தது. புதிய அரசாங்கத்திடம் இருந்து இந்தியா அதனையே எதிர்பார்த்திருந்தாலும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அதைச் செய்வதில் பலத்த சவால்கள் உள்ளன.
மாகாணசபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்த ஜாதிக ஹெல உறுமய ஒருபோதும் இணங்காது. அதைவிட, 100 நாள் செயற்றிட்டத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து கவனம் செலுத்தப்படாது என்று முன்னரே கூறியிருந்தார் மைத்திரிபால சிறிசேன.
எனவே உடனடியாக இலங்கை அரசிடம் இதனை வலியுறுத்தாது போனாலும், காலப் போக்கில் அதனை இந்தியா எதிர்பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகையதொரு கட்டத்தில், இலங்கை இந்தியாவின் அழுத்தங்களுக்கு உட்பட நேரிடலாம்.
ஆனால், அதற்கிடையில், இலங்கையுடனான உறவுகளைப் பலப்படுத்துவதில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை எட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள இந்தியா தீவிர அக்கறை செலுத்தி வரும் நிலையில், சீனாவும் தனது பக்கத்தில் இருந்து சாதகமான சமிக்ஞைகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, சீனப் பிரதமர் லீ கெகியாங்கும் அனுப்பிய வாழ்த்துச் செய்திகளில், இலங்கையுடனான உறவுகள் தொடர்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரும், இலங்கையில் சீனாவின் முதலீடுகள், திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்குக் காரணம், சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும், கொழும்பு துறைமுக நகர திட்டத்தை ரத்துச் செய்யப் போவதாக, ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தது தான். புதிய அரசாங்கம், பதவிக்கு வர முன்னரே, சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட சட்டவிரோதமான உடன்பாடுகள் ரத்துச் செய்யப்படும் என்று எதிரணித் தலைவர்கள் கூறியிருந்தனர்.
இலங்கையில் சீனா முதலீடு செய்துள்ள தொகை ஒன்றும் சாதாரணமானதல்ல. இந்த முதலீட்டு உடன்பாடுகளை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டால், சீனாவுக்கு அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
அந்த நெருக்கடி பொருளாதார ரீதியானதல்ல. சீனாவைப் பொறுத்தவரையில் இந்த தொகை வெறும் துரும்புக்கு ஒப்பானது. சீனா எதிர்பார்ப்பது இந்த திட்டங்களின் மூலம் இலங்கையில் தனது செல்வாக்கை பலப்படுத்திக் கொள்வதாகும்.
இந்தியப் பெருங்கடலில் மாத்திரமன்றி, அதற்கு அப்பாலும், ஐரோப்பா, ஆபிரிக்காவுடன் தொடர்புகளைப் பேணும் திட்டத்துக்கும், இலங்கையை முதன்மையான தங்கு நாடாக வைத்திருக்க முயன்றது சீனா.
அத்தகைய திட்டங்கள் அனைத்துக்கும் தலையாட்டும் பொம்மையாகவே மஹிந்த ராஜபக்ச இருந்து வந்தார்.
இத்தகைய முக்கியமானதொரு கட்டத்தில் மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தை இழப்பார் என்று சீனா கனவில் கூட நினைத்திருக்கவில்லை. அதனால் தான், சீனாவுக்கு இது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மஹிந்த ராஜபக்சவின் தோல்வி, சீனாவுக்கு பெரும் ஏமாற்றம், அதன் திட்டங்களுக்கு பின்னடைவு என்றே உலகளாவிய ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும், பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்து சீனாவுக்கு சற்று நம்பிகையளித்திருக்கும்.
சீனாவுடனான உறவுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும், சீனாவின் முதலீடுகளை இலங்கை வரவேற்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அவரே முன்னர், சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட முறையற்ற உடன்பாடுகள் ரத்துச் செய்யப்படும் என்று கூறியவர்.
ஆனால் பதவிக்கு வந்ததும், அவரது நிலைப்பாடு சற்று மாறியிருப்பதாகத் தெரிகிறது. சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் அதன் முதலீடுகள் ரத்துச் செய்யப்பட்டால், அதற்குப் பெரும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படாது.
இலங்கையைப் பொறுத்தவரையில் சீனாவின் முதலீடுகள் மிகப் பெரிய தொகை. இதனை முழுமையாக இழப்பதற்கு புதிய அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது. ஏனென்றால், அது புதிய அரசாங்கத்தின் மீதிருக்கும் மக்களின் நம்பிக்கையையும் பாழ்படுத்தி விடும்.
எனவே சீன விவகாரத்தில் இலங்கையின் புதிய அரசாங்கம் கொஞ்சம் பொறுமையாக, அவதானமாகவே முடிவுகளை எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தரக் கூடிய விவகாரமாக இருக்காவிடினும், நீர் மூழ்கிகளின் வருகை போன்ற ஆபத்தான விவகாரங்களில் சீனாவுக்கு இனிமேல் இலங்கை ஒத்துழைக்காது என்பதையிட்டு அது ஆறுதல் கொள்ளலாம்.
ஹரிகரன்