பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான ஆவணங்கள் திடீரென மாயமாக மறைந்துள்ளது !


தற்போது பொலிஸ் கைதின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலை மேர்சன்ட் வோர்ட் அறையில் சொகுசாக பொழுதை கழிக்கும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு , எதிரான ஆவணங்கள் சில காணமல் போயுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தில் சமூக பாதுகாப்பு நிதியம் தொடர்பில் இடம்பெற்ற பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான பிரதான 5 ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் செலவு தொடர்பான அத்தாட்சிகள் அதில் காணப்பட்டதாகவும் குறித்த திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எப்படியிருப்பினும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆவணங்கள் மாயமாகியுள்ளதனால் அவர் தொடர்பான அத்தாட்சிகள் அனைத்தும் அழிந்து போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இந்த ஆவணங்களை குறித்த நிறுவனத்தில் செயற்படுகின்ற ராஜபக்சவின் நெருக்கமான ஒருவரினால் எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila