வெளியே வந்தது அனந்தியின் கட்சி!

அடுத்த வடமாகாணசபை தேர்தலில் எப்படியேனும் கதிரையினை கைப்பற்றிவிடும் கனவில் அனந்தி மற்றும் ஜங்கரநேசன் தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையில் ஏற்கனவே தமிழ் தேசிய பசுமை இயக்கமெனும் அமைப்பினை உருவாக்கி அதனை முன்னிறுத்த முற்பட்டுள்ள நிலையில் இன்று அனந்தியின் கட்சியும் உதயமாகியுள்ளது.

தமிழர் சுயாட்சிக்கழகம் எனும் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு அனந்தி சசிதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான சதிகள் பின்னப்பட்டதாக சொல்லப்படும் யு.எஸ்.ஹோட்டலில் கோலகலமாக இந்நிகழ்வு நடந்திருந்தது.  தனது கட்சிக்கு தானே செயலாளர் நாயகமென அறிவித்துள்ள அவர் மத தலைவர்கள் தலைமையின் இக்கட்சியினை இப்பொழுது ஆரம்பித்துள்ளார்.

இதனிடையே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து முழுமையாக விலகிக்கொள்வதாக வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் கட்சித் தலைமைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் தமிழரசுக் கட்சி பென் உறுப்பினரான அனந்தி சசிதரன் கட்சியின் உள் முரண்பாடுகள் தொடர்பாக கட்ணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலும் கட்சியில் தொடர்ந்தும் அங்கத்துவத்தைப் பெறவே விரும்பியிருந்தார்.

இவ்வாறு கட்சியில் தொடர விரும்பியமையானது கட்சியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரது மாகாண சபை உறுப்பினர் பதவியும் வெற்றும் வெறுதாகும் நிலமை ஏற்படும் என்பதனால் அமைச்சராக தொடரும் விருப்பம்கொண்டு கட்சியில் முரண்பாட்டிற்கு மத்தியிலும் அங்கம் வகித்தார். இதேநேரம் வடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் எதிர்வரும் 24ம் திகதி நல்ளிரவுடன் நிறைவு பெறும் நிலையில் குறித்த பதவி விலகலை சமர்ப்பித்துள்ளார்.

இதேநேரம் புதிய கட்சிக்கான அறிவித்தலை இன்றைய தினம் அனந்தி சசிதரன் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் கடந்த 19ம் திகதியிடப்பட்ட கடிதத்தினை கட்சியின் தலைமைக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila