குற்றவாளிகளுக்கு வேட்புமனுக் கொடுக்கப்பட்டது ஏன்? - கேள்வி எழுப்புகிறார் அதாவுட


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஊழல் மோசடிகள், திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ஏன்  வேட்பு மனு வழங்கப்பட்டது என்பதனை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டுமென கேகாலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார். நான் தலைமை தாங்கும் கேகாலை மாவட்டத்தில் ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பேருக்கு ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஊழல் மோசடிகள், திருடர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ஏன் வேட்பு மனு வழங்கப்பட்டது என்பதனை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டுமென கேகாலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார். நான் தலைமை தாங்கும் கேகாலை மாவட்டத்தில் ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பேருக்கு ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளது.
           
வேட்பு மனு தயாரிப்பில் தாம் தலையீடு செய்யவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்வாறு எனில் திருடர்கள் மோசடிகாரர்களுக்கு யார் வேட்பு மனு வழங்கியது. யார் அவ்வாறு அதிகாரம் வழங்கியது. திருடர்கள், மோசடிகாரர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதனால், கொள்கை அடிப்படையிலான அரசியலில் ஈடுபட்டு வரும் எனக்கு மக்கள் முன்னால் சென்று வாக்கு கோர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila