தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமானால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட இராணுவமும் அக்குற்ற சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என கூறும் இலங்கை அரசு இராணுவத்தையும் குற்றவாளிகளாக கண்டு சிறையில் அடைத்து அவர்களுக்கு பத்து வருடங்களின் பின்னர் பொது மன்னிப்பினை வழங்கலாம்.
மாறாக குற்றம் சாட்டப்படாத இராணுவத்தை காரணம் காட்டி அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேற்றைய தினம் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் மேலும் பதிலளிக்கையில்;
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதென்பது அரசியல் ரீதியான விடயம். அரசியல் ரீதியான தீர்மானம் என்று சொல்லும் போது பல காரணங்கள் உள்ளன. ஜே.வி.பி. யின் காலத்தில் பலவிதமான கொடூரமான செயல்களில் ஈடுபட்டவர்களிற்கு கூட பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. ஆனால் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதற்கு அவர்கள் கூறும் கான்ரணம்; இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமானால் குற்றம் சாட்டப்படப்போகும் இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டும் என கேட்கின்றனர். இது உண்மையிலேயே சிரிப்பிற்குரிய விடயமாகும்.
இராணுவத்தின் மீது இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை, இந்நிலையில் இவர்கள் இப்படி கூறுகின்றார்கள். இராணுவம் குற்றவாளிகள் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என அரசாங்கமே இதன் மூலம் கூருகின்றதா? வேண்டுமானால் இராணுவம் மீது இப்பொழுதே குற்றம் சாட்டி சிறைகளில் அடையுங்கள்.
வேண்டுமானால் பத்து வருடங்களின் பின்னர் இதே போல் அவர்களையும் விடுவிக்கின்றோம். இது ஒரு அலாப்பிற [ஏமாற்றுவது] போல கதை, இராணுவத்தை விடுவிக்க வேண்டியிருக்கும். ஆகவே தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வில்லை. என கூறுகின்றனர்.
வேணுமென்றால் இராணுவத்தை குற்றவாளிகளாக இனங்கண்டு இப்பொழுதே அவர்களை சிறையில் அடைத்து பத்து வருடங்களின் பின்னர் இவ்விராணுவத்திற்கு பொது மன்னிப்பு வழங்கும் போது நாங்கள் பேசாமல் இருக்கின்றோம். தற்போதுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவ்வளவோ துன்பங்களை அனுபவித்து உள்ளனர்.
ஆகையால் இனி வரப்போகும் குற்றவாளிகள் அல்லது, குற்றம் சாட்டப்படுபவர்களோடு தமிழ் அரசியல் கைதிகளை ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவர்களுக்கு உடனடியாக பொது மன்னிப்பை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முதலமைச்சர்.
மாறாக குற்றம் சாட்டப்படாத இராணுவத்தை காரணம் காட்டி அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேற்றைய தினம் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் மேலும் பதிலளிக்கையில்;
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதென்பது அரசியல் ரீதியான விடயம். அரசியல் ரீதியான தீர்மானம் என்று சொல்லும் போது பல காரணங்கள் உள்ளன. ஜே.வி.பி. யின் காலத்தில் பலவிதமான கொடூரமான செயல்களில் ஈடுபட்டவர்களிற்கு கூட பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. ஆனால் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதற்கு அவர்கள் கூறும் கான்ரணம்; இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமானால் குற்றம் சாட்டப்படப்போகும் இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டும் என கேட்கின்றனர். இது உண்மையிலேயே சிரிப்பிற்குரிய விடயமாகும்.
இராணுவத்தின் மீது இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை, இந்நிலையில் இவர்கள் இப்படி கூறுகின்றார்கள். இராணுவம் குற்றவாளிகள் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என அரசாங்கமே இதன் மூலம் கூருகின்றதா? வேண்டுமானால் இராணுவம் மீது இப்பொழுதே குற்றம் சாட்டி சிறைகளில் அடையுங்கள்.
வேண்டுமானால் பத்து வருடங்களின் பின்னர் இதே போல் அவர்களையும் விடுவிக்கின்றோம். இது ஒரு அலாப்பிற [ஏமாற்றுவது] போல கதை, இராணுவத்தை விடுவிக்க வேண்டியிருக்கும். ஆகவே தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வில்லை. என கூறுகின்றனர்.
வேணுமென்றால் இராணுவத்தை குற்றவாளிகளாக இனங்கண்டு இப்பொழுதே அவர்களை சிறையில் அடைத்து பத்து வருடங்களின் பின்னர் இவ்விராணுவத்திற்கு பொது மன்னிப்பு வழங்கும் போது நாங்கள் பேசாமல் இருக்கின்றோம். தற்போதுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவ்வளவோ துன்பங்களை அனுபவித்து உள்ளனர்.
ஆகையால் இனி வரப்போகும் குற்றவாளிகள் அல்லது, குற்றம் சாட்டப்படுபவர்களோடு தமிழ் அரசியல் கைதிகளை ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவர்களுக்கு உடனடியாக பொது மன்னிப்பை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முதலமைச்சர்.