ஊர்களின் பெயர்களை மாற்ற வடக்கு மாகாண ஆளுனர் தடை!


வட மாகாணசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஊர்கள் மற்றும் இடங்களின் பெயர்களை தமது அனுமதியின்றி மாற்றக் கூடாது என  வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார உத்தரவிட்டுள்ளார்.  வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் யாழ்ப்பாண நகர ஆணையாளர் ஆகியோருக்கு இந்த உத்தரவினை அவர் பிறப்பித்துள்ளார்.
வட மாகாணசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஊர்கள் மற்றும் இடங்களின் பெயர்களை தமது அனுமதியின்றி மாற்றக் கூடாது என வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார உத்தரவிட்டுள்ளார். வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் யாழ்ப்பாண நகர ஆணையாளர் ஆகியோருக்கு இந்த உத்தரவினை அவர் பிறப்பித்துள்ளார்.
           
அண்மையில் நயினாதீவு இரண்டு வட்டாரங்களின் பெயர்கள் நாகதீப எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை, மீண்டும் நயினாதீவு என மாற்றம் மாற்றம் செய்ய வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்தே ஆளுனர் பெயர் மாற்றம் குறித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஊர்கள் இடங்களின் பெயர்கள் மாற்றக் கூடாது என உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளரும் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila