காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் இலஞ்சம் வாங்கிய பொலிசார்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்

காணாமல் போனவர்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, அவர்களின் உறவினர்களிடம் பொலிசார் இலஞ்சம் மற்றும் கப்பம் வாங்கிய விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.
இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுவிடம் இது தொடர்பிலான பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் அவர்களது உறவினர்களைத் தொடர்பு கொள்ளும் பொலிசார் மற்றும் புலனாய்வுத்துறையினர், காணாமல் போனவர்கள் தொடர்பில் முக்கிய தகவல்களைப் பெற்றுத் தருவதாக வாக்களித்து இவ்வாறு பணம் வாங்கியுள்ளனர்.
எனினும் பணம் வாங்கிய பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்குப்பதிலாக பணம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களும் தலைமறைவாகியுள்ளனர்.
இவ்வாறாக வடக்கு மற்றும் கிழக்கில் ஏராளம் உறவினர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணமும் ஏமாற்றிப் மோசடிசெய்யப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila