வடகிழக்கு எல்லை மீள் நிர்ணயம் தனது பரிந்துரைகளை கையளித்தது தமிழர் மகா சபை

வடகிழக்கு எல்லை மீள் நிர்ணயம் தனது பரிந்துரைகளை கையளித்தது தமிழர் மகா சபை-

உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னர் வடகிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய எல்லை நிர்ணயம் உள்ளடங்கலாக தனது பரிந்துரைகளை இலங்கை தமிழர் மகா சபை கையளித்துள்ளதாக அதன் தலைவர் கே. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
 
அண்மையில் நடந்த சர்வக கட்சிக் கூட்டத்தில் உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்னர் மீள் எல்லை நிர்ணயம் குறித்த பரிந்துரைகளை அரசியல் கட்சிகள் முன் வைக்கலாம் என ஜனாதிபதி கோரியதற்கு இணங்கவே இவ்வாறு முன் வைக்கப்பட்டுள்ளது.
 
தமிழர் மகா சபை முன் வைத்த பரிந்துரைகள்
 
யாழ்.மாவட்­டத்தில் நல்லூர் பிர­தேசம் யாழ்.மாந­கர சபை எல்­லைக்குள் காணப்­ப­டு­கின்­றது. ஆகவே யாழ்ப்­பாணம் நல்லூர் மாந­கர சபை எனப்­பெயர் மாற்­றப்­ப­ட­வேண்டும். நல்லூர் பிர­தேச சபை­யா­னது திரு­நெல்­வேலி பிர­தேச சபை­யாக மாற்­றப்­ப­ட­வேண்டும்.
 
கிளி­நொச்சி மாவட்­டத்­தினைப் பொறுத்­த­வ­ரையில் கண்­டா­வளை பிர­தேச சபை­யொன்று அமைக்­கப்­ப­ட­வேண்டும். அத்­துடன் கிளி­நொச்சி பிர­தேச சபையை நகர சபை­யாக தர­மு­யர்த்த வேண்டும்.
 
முல்­லைத்­தீவு மாவட்டம் யுத்­தத்தால் அதி­க­மாக பாதிக்­கப்­பட்ட பகு­தி­யாகும். தற்­போதே மக்கள் மீள்­கு­டி­யேறி வரு­கின்­றார்கள். எனவே அம்­மா­வட்­டத்தில் வட்­டா­ரங்கள் வகுக்­கப்­ப­டும்­போது மக்கள் தொகையின் அடிப்­ப­டை­யி­லேயே வகுக்க வேண்டும். வெலி ஓயா போன்ற பல பகு­திகள் பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நிலையில் அவை தொடர்­பாக ஆரா­யப்­ப­ட­வேண்டும்.
 
திரு­மலை மாவட்­டத்­தினை பொறுத்­த­வ­ரையில் 1940ஆம் ஆண்­டி­லி­ருந்து இயங்கி வரும் திரு­மலை நக­ர­ச­பையை மாந­கர சபை­யாக தர­மு­யர்த்­த­வேண்டும். திரு­கோ­ண­மலை பட்­டி­னமும் சூழலும் பிர­தேச சபையை உப்­பு­வெளி பிர­தேச சபை­யெனப் பெயர் மாற்றம் செய்­ய­வேண்டும்.
 
கந்­தளாய் பிர­தே­சத்­திற்கு சதுர்­வே­தி­மங்­களம் என்ற பெயர் மாற்றம் மீளவும் வழங்­கப்­ப­ட­வேண்டும். அத்­துடன் தென்­ன­ம­ர­வடி, ஆலங்­கேணி உள்­ளிட்ட பல பகு­தி­களில் தமிழ் பிர­தி­நி­தித்­து­வங்கள் இழக்­கப்­படும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது. ஆகவே வட்­டார எல்­லைகள் நிர்­ண­யம்­செய்­யப்­ப­டும்­போது நிலத்­தொ­ட­ரற்ற பிர­தே­சங்­களை ஒன்­றி­ணைப்­ப­தற்­கான விசேட ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும்.
 
அம்­பாறை மாவட்­டத்தில் தொடர்ந்தும் நில­வி­வரும் பிரச்­சி­னை­யான தமிழ் பிரி­வுக்­கான பிர­தேச சபை கோரிக்கை காணப்­ப­டு­கின்­றது. கல்­முனை தமிழ் பிரி­வுக்கு தனிப்­பி­ர­தேச சபை உரு­வாக்­கப்­பட்டு பிர­தேச செய­லாளர் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும்.
 
வீர­முனை வட்­டாரம் உரு­வாக்­க­ப்ப­டு­வ­தோடு நாவிதன்வெளி பிரதேச சபையுடன் சம்மாந்துறை பகுதியில் காணப் படும் தமிழ் பகுதிகள் இணைக்கப் பட வேண்டும்.
 
அதேபோன்று புத்தளம் மாவட்டத்திலும் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பாக கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. குறிப்பாக ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச சபையா னது உடப்பு பிரதேச சபையாக மாற்றப் படவேண்டும் என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila