கொக்கிளாயில் விகாரை அமைக்கும் காணிக்கு மாற்றுக் காணி வழங்க முற்படுவதற்கு முதலமைச்சர் கண்டனம்!

cv.wகொக்கிளாய் பகுதியில் விகாரை அமைப்பதற்காக தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றை பௌத்த பிக்கு ஒருவர் அபகரித்துள்ள நிலையில், காணி உரிமையாளருக்கு மாற்றுக் காணி வழங்க அதிகாரிகள் எடுத்த முடிவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கண்டித்துள்ளார். சட்டத்திற்கு முரணான செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவி அரசாங்க அதிபர் தவறியிருப்பதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வன்னி மாவட்ட பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடித்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள்,வயல்கள், மீன்பிடிப்பகுதிகள் தொழிற்புலங்கள் என பல பகுதிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் திருஞானசம்பந்தர் மணிவண்னன் என்ற தனியாரின் காணியை பௌத்த பிக்கு ஒருவர் விகாரை அமைக்க சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார். இதனை கண்டித்து அப் பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறித்த காணி உரிமையாளருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்காமல் மாற்றுக் காணியை வழங்கும் தவறான முன்னுதாரணத்தை எதிர்காலத்திற்கு வழங்க உதவி அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
காணி உரிமையாளருக்கு நியாயத்தை பெற்றுக்ககொடுக்கும் விதமாக காணியை அவருக்கு மீளப் பெற்றுக் கொடுப்பதுடன் இந்த விடயத்தில் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் எழுதிய கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila