கொஸ்­கம : வெடிப்பின் பின்னால்...!!


கொஸ்­கம, சாலாவ பகு­தியில் அமைந்­துள்ள இலங்கை இரா­ணு­வத்­துக்கு சொந்­த­மான தோட்­டாக்கள் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­படும் பிர­தான அல்­லது மத்­திய ஆயு­தக்­கி­டங்கு திடீர் வெடிப்­புக்கு முகம் கொடுத்­தது. 

இதனால் இந்த இரா­ணுவ ஆயுதக் கிடங்கின் அமை­வி­டத்­தி­லி­ருந்து சுமார் 5 கிலோ மீற்­றர்கள் சுற்­ற­ள­வுக்கு உட்­பட்ட சாலாவ, களு அக்­கல, சுது­வெல்ல, மாவில்­கம, கடு­கொட வடக்கு, அக்­க­ர­விட்ட, பெண்டி கம்­பொல, கொஸ்­கம மேற்கு, கொஸ்­கம கிழக்கு, முரு­க­கம ஆகிய 10 கிராம சேவகர் பிரி­வுகள் பாதிப்பை எதிர்­கொண்­டன. 

இதனால் 18628 பேர் இடம்­பெ­யர வேண்­டிய சூழல் ஏற்­பட்­ட­துடன் குறிப்­பிட்ட பிர­தே­சத்தின் அனைத்து நட­வ­டிக்­கை­களும் ஸ்தம்­பி­த­ம­டைந்­தன. இந்த திடீர் வெடிப்பின் சொத்து சேதம் எப்­ப­டியும் 1200 கோடி ரூபாவைத் தாண்டும் என அனு­மா­னிக்­கப்­பட்­டுள்ள போதும் இக்­கட்­டுரை எழு­தப்­படும் வரை (நேற்று அதி­காலை) உத்­தி­யோ­க­பூர்வ மதிப்­பீட்டுப் பணிகள் நிறைவு பெற்­றி­ருக்­க­வில்லை. இந்த வெடிப்­பினால் ஒருவர் உயி­ரி­ழந்­த­தா­கவும் 10 இரா­ணு­வத்­தினர் உட்­பட 48பேர் காய­ம­டைந்­த­தா­கவும் இரா­ணுவ தரப்பு தக­வல்கள் தெரி­வித்த நிலையில், இந்த வெடிப்புச் சம்­பவத்தின் தாக்கம், சேதம் தொடர்பில் ஆராய்­வது இக்­கட்­டு­ரையின் நோக்­க­மல்ல.

மாற்­ற­மாக இரா­ணு­வத்தின் பிர­தான ஆயுதக் கிடங்கில் இப்­படி திடீ­ரென ஏற்­பட்ட விபத்தின் பின்னால் உள்ள நியா­ய­மான கார­ணி­க­ளுடன் கூடிய சந்­தே­கங்­க­ளுக்கு விடை தேடு­வதே இதன் நோக்­க­மாகும்.

இரா­ணு­வத்­துக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடை­யி­லான யுத்தம் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்த இறுதிக் காலப்­ப­கு­தியில் கொஸ்­கம, சாலாவ ஆயுதக் கிடங்கின் பயன்­பாடு மிக உச்சம் எனலாம். கொழும்பு துறை­மு­கத்­துக்கு கொண்­டு­வ­ரப்­படும் ரீ– -56 ரக தோட்­டாக்கள் முதல் ஆர்.பி.ஜீ, ஷெல், மோட்டார் குண்­டுகள், ஆட்டி லறிகள் என முக்­கிய ஆயுதத் தொகை இந்த கிடங்­கி­லேயே களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டன. அதன் பின்­ன­ரேயே வடக்கு, கிழக்கு முகாம்­க­ளுக்கு யுத்த தேவையின் நிமித்தம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டன.

உண்­மையில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த காலப்­ப­கு­தி­யி­லேயே இந்த கொஸ்­கம, சாலாவ ஆயுதக் கிடங்கு நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. அது­வரை பனா­கொட இரா­ணுவ முகாமில் உள்ள கிடங்கில் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்ட இந்த ஆயு­தங்கள், யுத்த அவ­சியம், இலகு கருதி கொஸ்­கம, சாலாவ பகு­திக்கு மாற்­றப்­பட்­டி­ருந்­தன. சாலாவ ஆயு­தக்­கி­டங்கில் சுமார் 2500 தொன் ஆயு­தங்கள் எப்­போதும் இருப்பில் இருக்கும் நிலையில் கடந்த 4 ஆண்­டு­களை நோக்கும் போது இந்த ஆயுதக்கிடங்கு குறித்த இரா­ணு­வத்தின் நிலைப்­பாட்டில் தடு­மாற்­றத்தை அவ­தா­னிக்க முடி­கி­றது.

ஏனெனில் கடந்த நான்கு ஆண்­டு­க­ளுக்குள், சாலாவ ஆயுத களஞ்­சி­யத்தை அங்­கி­ருந்து அகற்ற தொடர்ச்­சி­யான முன்­னெ­டுப்­புக்கள் இடம்­பெற்று வந்­தன.

குறிப்­பாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவின் காலத்தில் இங்கு களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பல கன­ரக ஆயு­தங்கள் தியத்­த­லாவ மற்றும் மாது­ரு­ஓயா ஆகிய இரா­ணுவ முகாம்­களில் உள்ள ஆயுத கிடங்­கு­க­ளுக்கு மாற்­றப்­பட்­டன. முன்னாள் இரா­ணுவ தள­ப­தி­க­ளான ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய, ஜெனரல் தயா­ ரத்­நா­யக்க ஆகி­யோரின் விசேட ஆலோ­சனை மற்றும் கண்­கா­ணிப்பின் கீழேயே இந்­ந­ட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன. அதன்­படி ஜெனரல் தயா­ரத்­நா­யக்­கவின் காலப்­ப­கு­தியில் சாலாவ இரா­ணுவ ஆயுதக்கிடங்கை அனு­ரா­த­புரம் மாவட்­டத்தின் ஜன­சூன்ய பிர­தே­சங்கள் இரண்டில் அமைக்க ஆலோ­சிக்­கப்­பட்டு ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. ஒயா­ம­டுவ மற்றும் ரம்­பேவ பகு­தி­க­ளி­லேயே இந்த ஆரம்­ப­கட்ட பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இவை பெரும்­பாலும் 2014 ஆம் ஆண்டின் இறு­திப்­ப­கு­தி­யி­லேயே இடம்­பெற்­றன.

குறிப்­பாக இரா­ணு­வத்தின் மத்­தே­கொட வெடி பொருள் களஞ்­சி­யத்தில் 2014 ஒக்­டோ­பரில் ஏற்­பட்ட தீ பர­வலைத் தொடர்ந்து சாலாவ ஆயுதக் கிடங்கை இட­மாற்றும் நட­வ­டிக்­கையில் வேகம் அதி­க­ரித்­தது என்றால் மிகை­யா­காது.

இந்­நி­லை­யி­லேயே 2015 ஜன­வ­ரியில் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­ற­துடன் அந்த ஆண்டின் பெப்­ர­வரி மாதம் 22 ஆம் திகதி லெப்­டினன்ட் ஜெனரல் கிரி­ஷாந்த டீ சில்வா இரா­ணு­வத்தின் தள­பதி பத­வியை பொறுப்­பேற்றார். அதன்­பின்னர் சாலாவ ஆயுதக் கிடங்கு தொடர்பில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை என்ன என்­ப­தற்­கு­ரிய சரி­யான விளக்கம் இல்லை. எனினும் தற்­போ­தைய மேல் மாகாண கட்­டளை தள­பதி மேஜர் ஜெனரல் சுதந்த ரண­சிங்­கவின் தக­வல்­களின் பிர­காரம், சாலாவ ஆயுதக் கிடங்கை இட­மாற்றும் நட­வ­டிக்கை தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன் கடந்த 5 ஆம் திகதி ஞாயி­றன்று வெடிப்பு இடம்­பெறும் போது சுமார் 10 வீத­மான ஆயு­தங்­களே அதில் இருந்­த­தாக அறிய முடி­கி­றது. அப்­ப­டி­யானால் சுமார் 250 தொன் ஆயு­தங்கள் வரை அங்கு இருந்­துள்­ளன.

இந்த பின்­ன­ணியில் தான் திடீ­ரென சாலாவ ஆயுதக்கிடங்கு வெடிப்பு, தீ அனர்த்­தத்­துக்கு முகம் கொடுத்­துள்­ளது. இந்த திடீர் அனர்த்தம், அதா­வது ஒரு நாட்டு இரா­ணு­வத்தின் பிர­தான தோட்­டாக்கள் களஞ்­சி­யத்தில் திடீ­ரென இத்­த­கைய பாரிய அனர்த்தம் ஏற்பட்டமை பல்­வேறு சந்­தே­கங்­களை தற்­போது கிளற ஆரம்­பித்­துள்­ளது.

பொது­வாக ஆயுதக் கிடங்­குகள் மக்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் அமைக்­கப்­ப­டு­வ­தில்லை. மக்­களின் பாது­காப்பை முன்­னி­லைப்­ப­டுத்­தியே ஆயுத களஞ்­சி­யங்கள் அமைக்­கப்­படும் இடம் தீர்­மா­னிக்­கப்­படும். இவற்­றை­யெல்லாம் தாண்டி அமைக்­கப்­படும் ஆயுதக் களஞ்­சி­யங்­க­ளுக்கு அதி உச்ச பாது­காப்பும் அதிக கவ­னமும் எடுக்கப்படும். மிகப்­பா­து­காப்­பான வழி­மு­றை­களைப் பின்­பற்­றியே இந்­ந­ட­வ­டிக்­கைகள் இடம்­பெறும்.

பாது­காப்பு கார­ணங்­களைக் கருத்திற் கொண்டு ஒரு ஆயுதக் கிடங்கில் உள்ள ஆயுதத் தொகை, விப­ரங்­களை இரா­ணுவம் வெளி­யி­டாத போதும் அங்­குள்ள ஆயு­தங்கள் தொடர்பில் இரா­ணுவம் கழுகுக் கண் கொண்டு தனது அவ­தா­னத்தை திருப்­பி­யி­ருக்கும்.

இத்­த­கைய பின்­ன­ணியில் கொஸ்­கம, சாலாவ இரா­ணுவ ஆயு­தக்­கி­டங்கின் திடீர் அழி­வா­னது மிகத் திட்­ட­மிட்டு நடத்­தப்­பட்ட நாச­கார செய­லாக இருக்­கலாம் என்ற ஐயம் ஆயுத களஞ்­சி­யப்­ப­டுத்தல் மற்றும் தோட்­டாக்­களை கையாளல் தொடர்­பி­லான சிறப்பு நிபு­ணர்­களால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

தற்­போ­தைக்கு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமை­வாக, இந்த வெடிப்புச் சம்­ப­வ­மா­னது ஒரு கிர­ம­மான முறையில் இடம்­பெற்­றுள்­ள­மை­யா­னது அத்­த­கைய சந்­தே­கத்தை மேலெ­ழுப்­பு­கி­றது.

அதா­வது கிர­ம­மான முறை என இங்கு அடை­யாளம் செய்­யப்­ப­டு­வ­தா­னது, ரீ-–56 போன்ற இலகு ரக தோட்­டாக்கள் களஞ்­சியப்படுத்தப்­பட்ட பிர­தே­சங்­களில் வெடிப்பு ஆரம்­பித்து கன­ரக தோட்­டாக்­க­ளுக்கு பர­வி­ய­மையே கன­ரக தோட்­டாக்கள் (மோட்டார், ஆர்.பி.ஜி. போன்­றன) நிலக்கீழ் அறை­யி­லேயே பொது­வாக பாது­காக்­கப்­படும் நிலையில் அந்த பகு­தியை நோக்கி வெடிப்பு நகர்­வ­தென்­பது கிடங்கின் இறுதிப் பாது­காப்பு கட்­ட­மைப்பும் செய­லி­ழந்­ததன் பின்­னரே சாத்­தி­ய­மாகும்.

பொது­வாக இறுதி பாது­காப்பு கட்­ட­மைப்­பென்­பது, ஆயுதக்கிடங்கை அழிக்­க­வல்ல முறை­யொன்­றினை செயற்­ப­டுத்­து­வ­தாகும். இம்­மு­றைமை எல்லா ஆயுத கிடங்­கு­க­ளிலும் பொது­வாக இருக்கும். கிடங்­கா­னது எதி­ரியின் கையில் சிக்கும் போது ஆயு­தங்கள் அவர்கள் கைகளில் சிக்­கு­வதை தடுக்க இத்­த­கைய வழி­முறை பின்­பற்­றப்­படும்.

இந்­நி­லையில் பொது­வாக யுத்த களத்­தி­லேயே பயன்­ப­டுத்­தப்­படும் இந்த பாது­காப்பு வழி­முறை, சாலாவ ஆயு­தக்­கி­டங்கு விவ­கா­ரத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்­டதா என்ற சந்­தே­கமும் இல்­லா­ம­லில்லை.

அவ்­வா­றில்­லை­யெனில் மின்­க­சிவால் ஏற்­படும் தீ, வெப்பம் உள்­ளிட்ட கார­ணி­க­ளாலும் இவ்­வாறு வெடிப்பு இடம்­பெ­றலாம். எனினும் பிர­தான ஆயுதக் களஞ்­சி­யத்தில் மின் கசிவு ஏற்­படும் அள­வுக்கு அஜாக்­கி­ர­தை­யான பரா­ம­ரிப்பு இருந்­தி­ருக்கும் என எண்­ணு­வது கடி­ன­மாகும். அத்­துடன் சம்­பவம் இடம்­பெற்ற ஞாயிறு மாலை கொழும்பின் வெப்­ப­நி­லை­யா­னது 30.6 பாகை செல்­சியஸ். இந்த வெப்ப நிலை­யா­னது ஆயுதக் கிடங்­கொன்று தீ பிடித்து வெடித்துச் சிதறும் நிலைமை அல்ல. இந்­நி­லையில் தான் சதி நட­வ­டிக்கை கார­ண­மாக இந்த அனர்த்தம் ஏன் சம்­ப­வித்­தி­ருக்­கக்­கூ­டாது என்ற சந்­தேகம் பிறக்­கி­றது.

உண்­மையில் இந்த விவ­காரம் தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பரிவு உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஒரு­வரின் கீழான சிறப்பு பொலிஸ் குழுவும், முப்­ப­டை­களின் சிறப்பு விசா­ரணைக் குழுவினது விசாரணைகளும் நீதிவான் நீதி­மன்றத்தினது விசா­ர­ணைகளும் வெவ்­வே­றாக இடம்­பெ­று­கின்­றன. எனினும் இத்­த­கைய பாரிய அனர்த்தம் ஒன்றின் போது வழ­மை­யாக பிரத்­தி­யேக விசா­ர­ணை­களை நடத்தும் இரா­ணுவ உளவுப் பிரிவு இந்த சம்­பவம் குறித்த விசா­ர­ணை­களில் இருந்து தள்­ளி­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது சில பல சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது.

அதா­வது இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது, புலி­க­ளிடம் இருந்து மீட்­கப்­பட்ட பல ஆயு­தங்கள் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் உள்­ளன. அவற்றில் பல மாய­மா­கி­யுள்­ளமை தொடர்பில் பிரத்­தி­யேக விசா­ரணை ஒன்று இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்று வரு­வ­தாக அறி­ய­மு­டி­கி­றது. இந்­நி­லையில் அவ்­வாறு கைப்­பற்­றப்­பட்ட சில ஆயு­தங்கள் சாலாவ முகாமில் வைக்­கப்­பட்­டிந்­த­தா­கவும் அவற்றில் சில மாய­மா­ன­தாக சந்­தே­கிக்­கப்­படும் நிலையில் அக்­கி­டங்கு சோதனை செய்­யப்­பட இருந்த நிலையில் இத்­த­கைய அனர்த்தம் திடீ­ரென ஏற்­பட்­ட­தா­கவும் ஒரு கதை­யுண்டு. அத­னா­லேயே இரா­ணுவ உளவுப் பிரிவு இது குறித்த விசா­ர­ணை­களில் இருந்து ஒதுக்கி வைக்­கப்­பட்­ட­தாக உள்­வீட்டு தக­வ­லொன்று கூறு­கி­றது.

இத­னை­விட பாது­காப்பு செயலர் கரு­ணா­சேன ஹெட்டியாரச்சி, ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் வழங்கிய தக­வலும் இந்த அனர்த்தம் சதி நட­வ­டிக்­கை­யொன்றின் பிர­தி­ப­லனே என்­ப­தற்­கான பிர­தான சந்­தே­கத்­திற்­கான கார­ணியாகும்.

அதா­வது சாலாவ இரா­ணுவ முகாமில் இவ்­வ­னர்த்தம் பதி­வாகும் போது ஆயுதக்கிடங்கு அருகே, வீரர்கள் தீய­ணைப்பு பயிற்சி ஒன்றில் ஈடு­பட்­டி­ருந்­தமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்­துள்­ள­தாக பாது­காப்பு செயலர் கூறி­யி­ருந்தார். அப்­ப­டி­யானால் அத்­த­கைய சந்­தர்ப்­பத்தில் தீயா­னது இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்டை மீறி ஆயுதக்கிடங்கை ஆக்­கி­ர­மித்­ததா? என்ற சந்­தே­கமும் உள்­ளது.

இவற்­றை­விட சாலாவ இரா­ணுவ முகாமில் இவ்­வ­னர்த்தம் ஆரம்­பிக்கும் போது சுமார் 450 வீர வீராங்­க­னைகள் இருந்­த­தாக மேஜர் ஜெனரல் சன்ன குண­தி­லக கூறு­கிறார். அத்­துடன் ஆயுத களஞ்சியத்துக்கு கிட்­டிய தூரத்தில் பெண் இராணு சிப்­பாய்­களின் தங்­கு­மிடம் இருந்­துள்­ள­துடன் அதில் 19 பேர் குறித்த நேரத்தில் இருந்­துள்­ளனர். இந்­நி­லையில் இவர்கள் எவ­ருக்கும் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­ட­வில்லை. இத்­த­கைய நிலை­மைதான் அம்­மு­கா­முக்­குள்­ளேயே மேற்­கொள்­ளப்­பட்ட சதியின் செயலா இந்த அனர்த்தம் என்ற சந்­தேகத்தை ஏற்படுத்துகின்றது.

அத்­துடன் இந்த அனர்த்­தத்தில் உயி­ரி­ழந்த ஒரே வீர­ரான புத்­த­லயைச் சேர்ந்த கோப்ரல் ஜானக சமிந்த சாலாவ முகாமை சேர்ந்­தவர் அல்ல. அவர் அன்­றைய தினமே தான் சேவை­யாற்றும் கிளி­நொச்சி முகாமில் இருந்து உயர் அதி­காரி ஒரு­வரை அழைத்துக் கொண்டு சாலாவ முகா­முக்கு வந்­துள்ளார். அப்­ப­டி­யானால் சாலாவ முகாமில் இருந்த 450 பேரில் எவ­ருக்கும் ஏற்­ப­டாத விப­ரீ­தத்தில் வெளியில் இருந்து வந்த வீரர் மட்டும் சிக்கிக் கொண்­டமை எப்­படி?

இத்­த­கைய சந்­தே­கங்­க­ளுடன் இரா­ணு­வத்தின் உள்­வீட்டு பிரச்­சி­னை­யொன்றும் இந்த அனர்த்­தத்­துக்கு அடிப்­ப­டை­யாக அமைந்­ததா? என சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது. அதா­வது தற்­போ­தைய இரா­ணுவ தள­பதி லெப்­டினன் ஜெனரல் கிரி­ஷாந்த சில்வா ஓய்­வு­பெறும் வயதை தாண்­டியும் பதவி நீடிப்­புடன் பத­வியை தொடர்­கிறார். இது இரா­ணு­வத்­துக்குள் சில அதி­ருப்­தி­களை உரு­வாக்­கி­யுள்­ளது. அதன் பிர­தி­ப­ல­னாக அவரை வீட்­டுக்­க­னுப்ப இத்­த­கைய திட்டம் தீட்­டப்­பட்­டதா என்­பது ஆரா­யப்­ப­ட­வேண்­டி­யதே.

அத்­துடன் இன்­னு­மொரு விட­யமும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது. அதா­வது வடக்கில் முகாம்­களை அகற்ற வேண்டும் என்ற கோஷம் சர்­வ­தேச அளவில் எழுந்­து­விட்­டது. திடீ­ரென வடக்கில் முகாம்­களை அகற்ற முற்­பட்டால் அது இரா­ணு­வத்­துக்­குள்ளும் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தும் என அர­சாங்கம் எண்ணி இத்­த­கைய சம்­பவம் ஒன்றை திட்டம் தீட்டி நடத்தி அத­னூ­டாக வடக்கு முகாம்கள் தொடர்பில் தீர்­மானம் எடுக்க யோசனை செய்­ததா? என்­பதும் பல­மான சந்­தே­கமே.

இவ்­வாறு பல சந்­தே­கங்கள் மேலெழும் நிலையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் பாது­காப்­பி­லி­ருந்து இரா­ணு­வத்­தினர் முழு­மை­யாக நீக்­கப்­பட்ட சில மணி­நே­ரத்தில் இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்­துக்கும் அந்­நீக்கல் நட­வ­டிக்­கைக்கும் இடையில் தொடர்­புள்­ளதா எனவும் ஆரா­யப்­பட வேண்­டி­யதே.

சாலாவ ஆயுதக்கிடங்கைப் பொறுத்­த­வரை அப்­ப­கு­தியில் அதை தொடர்ந்து களஞ்சியப்படுத்தி வைத்திருக்க பொருத்­த­மற்ற ஒரு திட்­டமே என்­பதில் மாற்­றுக்­க­ருத்­தில்லை. இது குறித்து பல வரு­டங்­க­ளுக்கு முன்­ன­ரேயே சாலாவ ஆயு­தக்­கி­டங்கை அகற்ற கொஸ்­கம முகாமின் பாது­காப்பு தொடர்பில் ஆராய்ந்த அப்­போ­தைய இரா­ணு­வத்­தின் மேற்­பார்வை பணிப்­பாளர் மேஜர் ஜெனரல் சிசிர விஜே­ சூ­ரிய சிபா­ரிசு செய்­துள்ளார். எனினும் இந்த சிபா­ரிசு இது நாள்­வரை கண்­டு­கொள்­ளப்­ப­டாது இருந்­துள்­ளது.

உல­க­ளவில் 1998 முதல் 2011 வரை­யான காலப்­ப­கு­திகள் மட்டும் ஆயுதக் கிடங்­கு­களை அண்­மித்த 275 வெடிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

கடந்த மே மாதம் 31 ஆம் திகதி கூட இந்தியா, மகாராஷ்ட்டிராவின் சொந்த மாவட்டத்தின் இராணுவ ஆயுதக் கிடங்கொன்றில் வெடிப்பு இடம்பெற்றது. அது ஆசியாவின் 2 ஆவது பெரிய களஞ்சியம். இதன் அடிப்படையில் பார்க்கும் போது ஆயுதக் கிடங்கின் வெடிப்பொன்றும் உலகிலேயே நடைபெறாத சம்பவமல்ல. இலங்கையை பொறுத்தவரையில் கூட கடந்த 2011 செப்டெம்பர் அளவில் வீரவில, பண்ணேகமுவ இராணுவ முகாமிலும், 2014 ஒக்டோபரில் மத்தேகொட முகாம் களஞ்சியத்திலும் வெடிப்புக்கள் பதிவாகின.

அவை குறித்து இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெறுவதாக கூறினாலும் அவற்றுக்கான காரணம் இன்றுவரை மர்மமே.

அத்தகைய விசாரணை பின்னணியொன்று நிலவும் எமது நாட்டில் சாலாவ சம்பவத்தில் உண்மையை இராணுவம் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

சாலாவ ஆயுதக் கிடங்கு இறுதிக் காலப்பகுதியில் சீரான பராமரிப்புக்கு உட்படவில்லையென இராணுவ உள்ளக தகவல்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், நாம் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு இராணுவம் பதில்தரும் என எண்ண முடியாது.

எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவு இம்முறை இவ்விவகாரத்தை விசாரணை செய்யும் நிலையில், நாம் எழுப்பிய சந்தேகங்களை அவர்கள் ஆராயலாம். எல்லாவற்றுக்கும் முன்பாக அரச இரசாயன பரிசோதனையும், புலனாய்வுப் பிரிவின் ஆரம்பகட்ட விசாரணையும் நேற்றுவரை நிறைவுறாத நிலையில், விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு மூடி மறைக்கப்படுமா? என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.

- எம்.எப்.எம்.பஸீர்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila