வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படாது – அரசாங்கம் உறுதி

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படாது - அரசாங்கம் உறுதி

வடக்கு மாகாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள அரசாங்கம், வடக்கில் உள்ள அரசியல்வாதிகளின் அரசியல் நியாயங்களுக்காக வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும்  அகற்றப்படாது  என்பதில் உறுதியாக உள்ளதாகத்  தெரிவித்துள்ளது.
வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இராணுவம் தடையாக இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன்  அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான பதிலை தெரிவிக்கும் வகையில் இராணுவ தளபதியும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் இக்கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
வடக்கு முதல்வரின் கருத்துகளுக்கு எம்மால் எந்த பதிலையும் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜங்க அமைச்சர், நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila