வடக்கு மீள்குடியேற்றச் செயலணிக்கு இணைத்தலைமை - வடக்கு மாகாணசபைக்கு இடமில்லை!


வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக விரிவாக்கியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள், முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் செயலணி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை வடமாகாணத்தில் உள்ள பாரம்பரிய சிங்களக் குடியேற்றக் கிராமங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள எல்லைக் கிராமங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக விரிவாக்கியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள், முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் செயலணி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை வடமாகாணத்தில் உள்ள பாரம்பரிய சிங்களக் குடியேற்றக் கிராமங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள எல்லைக் கிராமங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
       
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக இந்த மீள்குடியேற்றச் செயலணி நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, துமிந்த திசநாயக்க மற்றும் டி.எம்.சுவாமிநாதன் ஆகிய நான்கு அமைச்சர்கள் இணைத்தலைவர்களாக பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்து வடக்கு மாகாணசபையுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். தற்போது இந்தச் செயலணி விரிவாக்கப்பட்டுள்ள போதிலும், வடக்கு மாகாணசபைக்கு இதில் இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila