விக்கினேசை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி)


வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனை வீட்டுக்கு அனுப்புவோம் என சுமந்திரன் தரப்பு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழரசுகட்சி உறுப்பினர்களின் ஊடக பேச்சாளராக கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் என்பவரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரை பதவிநீக்கம் செய்வது என்பதில் உறுதியாகஉள்ளோம் அதற்காக 3தெரிவுகளை நாம் கொண்டுள்ளோம். அதாவது வடமாகாணசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது அல்லது ஆளும் கட்சிக்குள் ஒருவரை தலைவராக தெரிவு செய்து முதல்வராக அவரை தெரிவு செய்வோம் எல்லா தெரிவுகளுக்குமுரிய முன்னேற்பாடுகளுடனேயே நாம் இருக்கிறோம்.

இன்னும் ஒன்றரை வருடங்களே மாகாணசபை காலம் இருப்பதால் அந்த ஒன்றரை வருடங்களுக்கு கூட முதலமைச்சராக பதவியில் இருப்பதற்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

யார் புதிய முதலமைச்சர் என்பதில் சீ.வி.கே சிவஞானம் அவர்கள் தமிழரசுக்கட்சியின் பெரும்பாண்மை உறுப்பினர்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



முதலமைச்சருக்கு எதிரான அணியில் இன்றுவரை செயற்படும் தமிழரசுக்கட்சி -13 உறுப்பினர்களும் மற்றும் முஸ்லீம் கட்சிகளை சேர்ந்த இரு உறுப்பினர்களும்

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila