சிறிதரன் விக்கிக்கு எழுதிய காதல் கடிதம் சிக்கியது(கடிதம் உள்ளே)

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் விவகாரம்
பரபரப்பாகி ஓய்ந்த நிலையிலும் தற்போது கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் அரியரட்ணம் அவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கப்படக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முதலமைச்சர் சி.வி.விக்ஸேன்வரனுக்கு எழுதியதாக இணையத்தளங்களில் வெளியாகியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் நான் உங்களுக்குத்தான் ஆதரவு என்ன செய்ய எங்கட கட்சி கொள்ளையால உங்களுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்க முடியவில்லை அதனை புரிந்துகொள்ளுமாறும் எழுதியிருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சுக்கள் பதவி விலகிய நிலையில் கல்வி அமைச்சுக்குப் பொருத்தமாக முன்னாள் கிளிநொச்சி மாவட்ட கல்விப்பணிப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான அரியரட்ணம் காணப்படுகிறார் என்று பரவலாக பேசப்பட்டபோதும் அவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்குமிடையில் கடும்பகை நிலவுவதால் அவருக்கு அந்த அமைச்சு போவதை சிறிதரன் இயலுமானவரை தடுத்துவிடுவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இந்த நிலையில் புதிய கல்வி அமைச்சரை கிளிநொச்சிக்கு வழங்கவேண்டாம் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்ற கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila