இராணுவ முகாம் ஆயுத களஞ்சியத்தில் ஆயுதங்கள் கொள்ளை

அனுராதபுரம் - கலத்தேவே பகுதியில் இருக்கும் இராணுவ முகாமில் உள்ள ஆயுத களஞ்சியசாலையின் கதவை உடைத்து திருடி செல்லப்பட்டுள்ளதாக முகாம் அதிகாரி ஒருவர் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புக்கு மத்தியில் இருக்கும் இந்த ஆயுத களஞ்சியத்தில் வெளியார் வந்து திருடும் வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, இராணுவ சிப்பாய் ஒருவரே துப்பாக்கிகளை திருடியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், குறித்த விடயம் தொடர்பாக இராணுவ பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila