எழுக தமிழை குழப்பியவருக்கு மகுடம் சூட்டினார் மாவை


கடந்த ஆண்டு இடம்பெற்ற எழுகதமிழ் நிகழ்விற்கு
ஒத்துழைப்பு வழங்காது எதேச்சதிகாரமாக அறிக்கை விட்டு எழுகதமிழை குழப்பிய ஒருவராக இருந்துவந்த யாழ் வணிகர் கழக தலைவர் திரு ஜெயசேகரம் அவர்களுக்கு தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் வடமாகாணசபை உறுப்பினர் பதவி கொடுத்து இன்று பரிகாரம் தீர்த்து வைத்துள்ளார்.

கடந்த எழுகதமிழ் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வேளை எல்லோருடைய ஒத்துழைப்பு வழங்கப்பட்டபோதும் வணிகர் கழக தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி வணிகர் கழகம் ஒத்துழைப்பு வழங்காது என தமிழரசுக்கட்சி பத்திரிகையில் செய்தி வெளியிட்டு மாவையின் மனங்குளிர வைத்த ஜெயசேகரம் அவர்களுக்கு நன்றிக்கடனாக இப்போது இரண்டாவது சுற்று மாகாணசபை உறுப்பினர் பதவியையும் தமிழரசுக்கட்சி தனதாக்கி வணிகர் கழக தலைவரான ஜெயசேகரத்திற்கு வழங்கியுள்ளார் மாவை சேனாதி.



இந்த நிகழ்வு இன்று மானிப்பாய் வணிகர்கழகத்தில் இந்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது. இதில் மாகாணசபை உறுப்பினர் கேசவன் சஜந்தன் மற்றும் பரம்சோதி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.








நாளை எள்ளெண்ணெய் எரிக்க இலண்டன் செல்கிறார் சரா எம்.பி
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila