காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர் மீது தாக்குதல்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை
இழிவுப்படுத்தி பேசிய நபர் ஒருவரை தாய்மார் சிலர் தாக்கிய சம்பவமொன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு முன்னதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது அங்கு வந்த நகைக்கடை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தாய்மாரை இழிவுபடுத்தி பேசியுள்ளார்.










இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அந்த நபருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதுடன் குறித்த நபரை அவர்கள் முற்றுகையிட்டிருந்தனர். இதனையடுத்து அந்த நபர் சம்பவ இடத்திலிருந்து சென்றுள்ளார்.

எனினும், ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த பின் குறித்த நபர் உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila