துப்பாக்கி சூட்டு கொலைகளில் ஓடும் ஆபத்தான அமைதி!

யாழ்ப்பாணத்­தில் மீண்­டும் ஒரு கொலை நிகழ்ந்­துள்­ளது. துப்­பாக்­கி­யால் சுட்டு இளை­ஞர் ஒரு­வர் கொல்­லப்­பட்­டுள்­ளார். ஏற்­க­னவே இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டுக் கொலை­கள் தீர்க்­கப்­ப­டா­மல் இருக்­கும் நிலை­யில் மற்­றொரு கொலை இடம்­பெற்­றுள்­ளது.
இந்­தக் கொலையை யார் செய்­தார்­கள் என்ற மர்­மம் நேற்று இரவு வரை­யில் துலங்­க­வில்லை. போதைக் கடத்­தல், சட்­டத்­துக்­குப் புறம்­பான செயல்­கள் என்­ப­வற்­று­டன் தொடர்­பு­ப­டுத்தி பல்­வேறு ஊகங்­க­ளும் வதந்­தி­க­ளும் உலா­வு­கின்­றன.
ஆனால், சம்­ப­வத்துக்கான கார­ணமோ குற்­ற­வா­ளி­கள் தொடர்­பான தக­வல்­களோ திட்­ட­வட்­ட­மாக வெளி­வ­ர­வில்லை. படை­க­ளின் புல­னாய்­வுக் குழுக்­கள் இந்­தக் கொலை­யு­டன் தொடர்­பு­பட்­டுள்­ளன என்­கிற ஊக­மும் கூட உலா­வு­கின்­றது.
கொலையை நேரில் கண்ட சாட்­சி­யான மோட்­டார் சைக்­கி­ளைச் செலுத்­திச் சென்ற நபர், சுட்­ட­வர்­க­ளில் ஒரு­வ­ரைத்தான் பொலிஸ் நிலை­யங்­க­ளில் கண்­டி­ருக்­கி­றார் என்­றும் அவர் புல­னாய்­வுப் பிரி­வைச் சேர்ந்­த­வர் என்­றும் பல­ரி­டம் கூறி­யி­ருக்­கி­றார்.
ஆனால், அது பற்றி விசா­ரணை நடப்­ப­தா­கவோ சந்­தே­க­ந­பர்­கள் யாரா­வதுஇனங்­கா­ணப்­பட்­டி­ருப்­ப­தா­கவோ எந்­தப் பகி­ரங்­கத் தக­வல்­க­ளும் இது­வ­ரை­யில் கிடை­யாது.
இந்­தச் சம­யத்­தில்­தான் ஒரு வரு­டத்துக்கு முன்­னர் நடந்த சம்­ப­வம் நினை­வில் ஊச­லா­டு­கி­றது. பல்­க­லைக்­க­ழக மாண ­வர்­கள் இரு­வர் பொலி­ஸா­ரால் சுட்­டுக்­கொல்­லப்­ப­ட்ட நிலை யில், அவர்­கள் இரு­வ­ரும் விபத்­தில் உயி­ரி­ழந்­தார்­கள் என்றே பொலி­ஸார் ஆரம்­பத்­தில் தக­வல்­களை வெளி­யிட்­டார்­கள்.
இப்­போது மணி­யந்­தோட்­டக் கொலை­யில் புல­னாய்­வா­ ளர்­க­ளின் தொடர்­பு­கு­றித்து அர­சல் புர­ச­லா­கக் கதை­கள் அடி­ ப­டும் நிலை­யில், பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் கொலை ­யின் போது பொலி­ஸார் நடந்­து­கொண்ட விதத்­தைச் சீர்­தூக்­கிப் பார்ப்­பது தவிர்க்க முடி­யா­தது.
அத்­தோடு எங்­கேயோ இடிக்­கும் மற்­றொரு விட­யம், நல்­லூ­ரில் நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப் பாது­கா­வ­லர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­போ­தும், கொக்­கு­வி­லில் பொலி­ஸார் இரு­வர் வாளால் வெட்­டப்­பட்­ட­போ­தும் குற்­ற­வா­ளி ­க­ளைப் பிடிப்­ப­தில் பொலி­ஸார் காட்­டிய வேக­மும் அவ­ச­ர­மும் இந்­தக் கொலை­யில் ஏன் இல்லை என்­ப­து ­தான்.
எந்­தக் கொலை­யாக இருந்­தா­லும் சட்­டம் ஒழுங்­குக் காவ­லர்­கள் அதனை ஒரே மாதி­ரி­யா­கத்­தானே அணு­கி­யி­ருக்க வேண்­டும். அப்­ப­டி­யில்­லா­மல் சாட்­சி­கள் தெளி­வான தக­வல்­களை வழங்­கி­னால்­ தான் சந்­தே­க­ந­பர்­களை இனங்­கண்டு நட­வ­டிக்கை எடுக்­க­ மு­டி­யும் என்­பது போன்று பொலி­ஸார் இந்த வழக்­கில் நடந்­து­ கொள்­வது நியா­ய­மான சந்­தே­கங்­களை எழுப்­பு­கி­றது.
அரி­யா­லைச் சம்­ப­வத்­தில் கொல்­லப்­பட்ட இளை­ஞன் மற்­றும் அவ­ரு­டன் கூடச் சென்­ற­வர் என இரு­வ­ருமே குற்­றப் பின்­னணி கொண்­ட­வர்­கள் அல்­லர் என்­கின்­றன தக­வல்­கள். அவர்­கள் மீது பொலிஸ் நிலை­யங்­க­ளில் முறைப்­பா­டு­களோ, நீதி­மன்­றங்­க­ளில் வழக்­கு­களோ இல்லை.
அப்­ப­டி­யி­ருக்­கும்­போது அவர்­க­ளில் ஒரு­வர் கொல்­லப்­பட்­ட­தும், அவர்­கள் சட்­டத்துக்குப் புறம்­பான பல்­வேறு சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்­கிற கதை­கள் பரப்­பப்­ப­டு­வ­தன் பின்­ன­ணி­யும் கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டி­யதே!
குற்­றங்­க­ளு­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்­ப­தால் உயிர் வாழத் தகு­தி­யற்­ற­வர்­கள் என்­கிற மறை­மு­க­மான நியாயப்­ப­டுத்தல் இதற்­கூ­டாக சமூ­கத்­தின் ஏனைய கூறு­க­ளுக்­குக் கடத்­தப்­ப­டு­கின்­றதா என்ற கேள்­வி­யைத் தவிர்க்க முடி­ய­வில்லை.
ஏனெ­னில் கொலை நிகழ்ந்து இரண்டு நாள்­கள் கடந்த பின்­ன­ரும்­கூட மனித உரிமை அமைப்­பு­களோ, பொது அமைப்­பு­களோ எது­வும் இந்­தக் கொலை தொடர்­பில் மூச்­சுக்­கூட விட­வில்லை. அர­சி­யல் கட்­சி­க­ளும் வாய்­மூடி மௌனி­க­ளா­கவே இருக்­கின்­றன.
குற்­றங்­க­ளோடு தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்­றால் கேட்­டுக் கேள்­வி­யின்­றிக் கொல்­லப்­ப­ட­லாம் என்­ப­து­தான் நியா­யம் என்று ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளதா? இது மிக மிக ஆபத்­தான போக்கு. அதற்கு எதி­ராக ஒட்­டு­மொத்­தச் சமூ­க­மும் கிளர்ந்து எழ­வேண்­டும்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila