மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு!

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் கள்ள மௌனம் சாதித்துவருகின்ற நிலையினில் அவர்களுடன் கட்டாயக் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்காக அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒன்றுகூடுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் மேற்படி மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள செய்தி குறிப்பினில் குறித்த கலந்துரையாடல் மிகவும் இக்கட்டான ஒரு சூழ் நிலையில் மேற்கொள்ளப்படவிருப்பதால் அனைத்து மக்கள் பிரதி நிதிகளினையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 3ம் திகதி பிற்பகல் 2.00மணிக்கு தவறாது ஒன்றுகூடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒன்றுகூடலினை உதாசீனம் செய்பவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை உதாசீனம் செய்பவர்களாக கருதப்படுவார்கள் என்றும் மேற்படி மாணவர் ஒன்றியம் தெரிவித்துமுள்ளது.uj-rep2
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila