மாவீரர்களை பயன்படுத்தி அரசியலாம் கூட்டமைப்பு !

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களையும் முன்னாள் போராளிகளையும் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த குற்றச்சாட்டினை கிளிநொச்சி யில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் போது வேட்பு மனுதாக்கல் நிராகரிக்க ப்பட்ட சுயேட்சைக் குழு ஒன்று முன்வைத்துள்ளது.

கிளிநொச்சியில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் நிரா கரிக்கப்பட்ட முன்னாள் போராளி யான வ.அன்னலக்ஸ்மி தலைமையிலான சுயேட்சைக் குழு நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை கிளிநொச்சி சோலைவனத்தில் நடத்தியது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் போராளியான வ.அன்ன லக்ஸ்மி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சன ங்களை முன்வைத்துள்ளார்.  

அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போரா ளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த எந்தவொரு அரசியல் தலைவர்க ளும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையென குற்றம் சுமத்தி யுள்ளார். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila