முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவுக்கு மைத்திரி அமைக்கவுள்ள புதிய அமைச்சரவையில் மீன்பிடி அமைச்சு வழங்கப்படலாமென ஆரூடங்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கியதன் அடிப்படையிலும் வடகிழக்கிற்கு வெளியே ஜனாதிபதியின் சுதந்திரக்கட்சியுடன் இணைந்தும் டக்ளஸ் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
முன்னதாக மைத்திரி – ரணில் தரப்போடு நெருக்கமாக இருந்த கூட்டமைப்பு டக்களஸை அமைச்சில் இணைக்ககூடாது என்று திட்டவட்டமாக இருந்தது. இதனால் டக்ளஸ் கடந்த இரண்டரை வருடங்களாக நீண்ட இடைவெளியின் பின்னர் அமைச்சில் இணைக்கப்படவில்லை.அதனால் அமைச்சர் அடைமொழி அவரிற்கு கிட்டியுமிருக்கவில்லை.
இந்நிலையில் தற்போது உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னராக கூட்டமைப்பு வெற்றி பெற்ற 90 விழுக்காடு சபைகளில் பெரும்பான்மையாக ஆட்சியமைக்கமுடியாது திண்டாடிவருகின்றது.
குறித்த உள்ளுராட்சி சபைகளில் அடுத்த நிலையிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்சி அமைக்க சந்தர்ப்பம் வழங்க கூடாதென்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பு டக்ளஸின் கால்களில் வீழ்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக டக்ளஸ்- சுமந்திரன் பேரம் பேசலின் அடிப்படையிலே இலங்கையில் மிக முக்கியமான அமைச்சுக்களில் ஒன்றான மீன்பிடி அமைச்சினை கேட்டு பெற்றுள்ளதாக சொல்லப்படுகின்றது.
எனினும் எந்தவொரு அமைச்சினையும் கேட்டுப்பெறவேண்டிய தேவை டக்ளஸிற்கு இருந்திருக்கவில்லையென அவரது கட்சி வாதிட்டுவருகின்றது.