உதயசூரியன், மொட்டு ஆதரவில் வேலணையில் ஈபிடிபி ஆட்சி!


வேலணைப் பிரதேச சபையின்  தவிசாளராக ஈபிடிபியைச் சேர்ந்த நமசிவாயம் கருணாகரமூர்த்தியும், பிரதித் தவிசாளராக பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  
இன்று காலை நடைபெற்ற தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாவலனும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் கருணாகர குருமூர்த்தியும் போட்டியிட்டனர்.
வேலணைப் பிரதேச சபையின் தவிசாளராக ஈபிடிபியைச் சேர்ந்த நமசிவாயம் கருணாகரமூர்த்தியும், பிரதித் தவிசாளராக பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நடைபெற்ற தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாவலனும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் கருணாகர குருமூர்த்தியும் போட்டியிட்டனர்.

இதில் இரு வேட்பாளர்களுக்கும் தலா 9 வாக்குகள் கிடைத்து சமநிலை ஏற்பட்டது. இதனையடுத்து குலுக்கல் முறை மூலம் ஈபிடிபியின் கருணாகர குருமூர்த்தி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
20 உறுப்பினர்களைக் கொண்ட இச் சபையில் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும், ஈபிடிபி 6 உறுப்பினர்களையும், பொதுஐன பெரமுன 2 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளனஃ
தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது, கூட்டமைப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது. அதே நேரம் ஈபிடிபிக்கு பொதுஜன பெரமுன கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆதரவாக வாக்களித்தன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன நடுநிலை வகித்திருந்தன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila