கண்டி மோதலின் எதிரொலி! இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுப்பு

இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அவசரகாலச் சட்ட அறிவிப்பு தொடர்பில் உலகின் முக்கிய நாடுகள் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
இலங்கையில் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் மேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பிரித்தானிய தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila