காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஜனாதிபதியின் உருக்கமான பதில்......!

காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகத்தின் ஊடாக காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கை கீழே தரப்படுகின்றது.யாழ்ப்பாணம் புனித பத்திரிசிரியார் கல்லூரியின் ஆய்வுக்கூடம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி சென்ற வேளையில் காணாமல் போனோரின் உறவினர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது ஜனாதிபதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களில் மூவரை மாத்திரம் அழைத்து கலந்துரையாடினார்.
இதன்போது உரிய தீர்வினை பெற்றுதருவதாக வாக்களித்திருந்தார.அதற்கிணங்க காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila