வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை வெளியேற்ற உத்தரவு!


வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வாடி அமைத்து தங்கியுள்ள கடலட்டை பிடிப்பவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வாடி அமைத்து தங்கியுள்ள கடலட்டை பிடிப்பவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வாடி அமைத்து தங்கியுள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த கடலட்டை பிடிப்பவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதுடன் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். இதனையடுத்து அங்கு தங்கியுள்ள எட்டு கடலட்டை பிடிக்கும் நிறுவனங்களிற்கு எதிராக மருதங்கேணி பிரதேச செயலகத்தினால் கிளிநொச்சி நீதிமன்றில் கடந்த 21 ஆம் திகதி வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.கிளிநொச்சி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இத் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
அவர்கள் உடனடியாக வெளியேற தவறும் பட்சத்தில் தீர்ப்பின் பிரதியினை பெற்று பொலிசில் முறையிட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மருதங்கேணி பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila