மஹிந்தவின் அடிமையாக செயற்படும் ராஜதந்திரி! சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் உதவியாளராக இலங்கை ராஜதந்திரி ஒருவர் மாறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கட்டாருக்கான இலங்கை தூதுவராக செயற்படும் வர்த்தகர் ஏ.எஸ்.பி.லியனகேவின் புதிய தொழில் தொடர்பான புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜதந்திரியான அவர் விமான நிலையத்தில் பயணப்பை தூக்கி செல்லும் நபராக மாறியுள்ளமையே அதற்கு காரணமாகும்.
அண்மையில் சீ.எச்.றகர் அணி கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டது. இதன்போது மஹிந்தவின் புதல்வர்களான ரோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்சவின் பயணப் பையை தூதுவர் தூக்கி செல்லும் காட்சி அந்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
மஹிந்தவின் நெருக்கமான நபரான லியனகே இவ்வாறான காரியங்களை செய்வது சாதாரணமான விடயமாக இருந்தாலும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜதந்திரி ஒருவர் இவ்வாறு செயற்படுவது அவமானம் என குறித்த ஊடகம் சாடியுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila