இலங்கையில் முழுமையான அரசியலமைப்பு மறுசீரமைப்பின் தேவை காணப்படுவதாக எழுத்தாளரும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதியுமான காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.
பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களை கொண்ட மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருவதன் காரணமாக இந்த தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் 20வது திருத்தச் சட்டம் என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முழுமையான அரசியலமைப்பு மறுசீரமைப்பின் மூலமே நாட்டில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comments