இதன்போது சாபநாயகர் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களால் தண்ணீர் போத்தல்கள் மற்றும் குப்பை கூடைகள் தூக்கி வீசப்பட்டன.
இதனால் அதிர்ச்சியடைந்த சாபநாயகர் தனது ஆசனத்தை விட்டு வெளியேறிச் சென்றார். இதன் காரணமாக நாடாளுமன்ற அமர்வுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
அங்கு ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் நாடாளுமன்றத்தை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார்.
இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. உரையாற்ற ஆரம்பித்த வேளை சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து இரு தரப்பிரும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இரண்டு தரப்பினரும் சபாமண்டபத்துக்கு நடுவில் வந்து வாக்குவாதங்களில் ஈடுபட்டதுடன் சிலர் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தண்ணீர் போத்தல்கள் மற்றும் குப்பை கூடைகளை சபாநாயகரை நோக்கி தூக்கியெறிந்ததையடுத்தே சபாநாயகர் எந்த வித அறிவிப்பையும் விடுக்காது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார்.
எனினும் அமர்வினை தொடர்ந்தும் நடத்த முடியாத நிலையில் எதிர்வரும் 21ம் திகதி வரை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.



