இம்முறை சீ.வீ.கே வெள்ளையடிக்க வருகின்றார்?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் கோரவில்லை என, வட மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் காதில் பூ வைத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவதற்கு ஆதரித்து கையெழுத்திட்டு கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குமாறு கூட்டமைப்பு ஒருபோதும் கோரவில்லை. மாறாக ஐக்கிய தேசிய முன்னணி நியமிக்கின்ற அல்லது பரிந்துரைக்கின்ற நபருக்கு கூட்டமைப்பு தமது ஆதரவை வழங்குவதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஆனால் ஏற்கனவே திட்டமிட்ட நாடகத்தின் படி ஜக்கிய தேசியக்கட்சியிடம் பிரதமர் பதவிக்கு ஒருவரை சிபார்சு செய்ய கூட்டமைப்பு கோரிக்கை விட ரணிலே அதற்கு பொருத்தமரானவரென அக்கட்சியும் இன்று அறிவித்துள்ளது.
ஆனால் வழமை போலவே நாடகத்திற்கு வெள்ளையடிப்பதில் சிறீதரன் இம்முறை பங்கெடுக்க முடியாத நிலையில் சீ.வீ.கே நாடகத்திற்கு வெள்ளையடிக்கின்ற பணியை ஆரம்பித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila