தமிழ் மக்கள் உண்மையான சுதந்திரத்தை போருக்குப் பின்னர் அனுபவித்து வருவதாக, யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி வெளியிட்டிருந்த கருத்து உண்மைக்குப் புறம்பானதெனத் தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு, இவரது இந்தக் கருத்தானது, இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளது.இது குறித்து, கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு, இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழ் மக்கள், தாங்கள் அனுபவித்த சுதந்திரத்தையும் கௌரவத்தையும் 2009க்குப் பின்னர் படிப்படியாக இழந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும். இவ்வாறனதொரு சூழலில் யாழ். இராணுவக் கட்டளைத் தளபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி யதார்த்தமற்ற உண்மைக்குப் புறம்பானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


