யாழ் 51%, வவுனியா 51%, மன்னார் 50%, முல்லை 59% ,கிளிநொச்சி 55%


news
வடக்கு மாகாணத்தில் இதுவரை வாக்களித்த வாக்காளர்களின் வீதத்தில் முல்லைத்தீவு மாவட்டம் முன்னிலை வகிக்கின்றது. 
 
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
 
இந்தநிலையில், இதுவரை வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் முல்லை மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 1.30 மணிவரை   59 % வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.
 
அதேபோல, யாழ். மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 2மணிவரை  51%வாக்குகளும் ,  வவுனியா மாவட்டத்தில் 7 மணி தொடக்கம் 2 மணிவரை 51% வாக்குகளும் , மன்னாரில் 50%வாக்குகளும் , கிளிநொச்சி மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 2 மணிவரை 55 % வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். 
 
யாழில் 20%, வவுனியா 28%,முல்லை 33%, மன்னார் 14%, கிளிநொச்சி 30%
 
யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். 
 
யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 வாக்காளர்கள் 526 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
 
இந்தநிலையில், இன்று காலை 7மணியில் இருந்து இதுவரை 20வீதமான வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 20 வீத வாக்களும் , வவுனியா மாவட்டத்தில் 7மணி முதல் 11 மணிவரை 28 வீதமான வாக்குகளும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 மணி முதல் 10 மணிவரை  33 வீதமான வாக்குகளும் , மன்னார் மாவட்டத்தில் 7 மணி முதல் 10.30 மணிவரை 14 வீதமான வாக்குகளும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 30 % வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர். 
 
 
 
 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila