மைத்திரியை குழப்பும் போலி சிறிசேன! மஹிந்தவின் முட்டாள்தனம் அம்பலம்

(2ம் இணைப்பு)
ஜனாதிபதி தேர்தலில் தோல்வி நிச்சயிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தரப்பு போலி சிறிசேன ஒருவரை வேட்பாளராக களமிறக்கியுள்ளதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடைசி நேரத்தில் அவரை போட்டியில் இருந்து விலக செய்து அதனூடாக மஹிந்த தரப்பு பொது வேட்பாளருக்கு சேறு பூசும் நிகழ்ச்சி நிரலுக்கு தயாராகி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இம்முறை தேர்தலில் போட்டியிட ஆர்.ஏ.சிறிசேன என்பவர் களமிறங்கியுள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்களை போன்று ஒப்பனை செய்யப்பட்டு  இன்று சிங்கள நாளிதழ்களில் அவரின் விளம்பரங்கள் பிரசுரமாகின்றன.
மைத்திரி அணியும் உடை வடிவமைப்பு முதல்கொண்டு அவர் அணியும் மூக்கு கண்ணாடி வரை அச்சு அசலாக அவரை போன்று போலி சிறிசேன உருவாக்கப்பட்டுள்ளமை இதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளார் என்ற சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.
கடைசி நேரத்தில் இந்த அரசாங்கத்தின் செட்டப் சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக செய்து சிறிசேன போட்டியில் இருந்து விலகிவிட்டதாக பிரச்சாரம் செய்ய மஹிந்த தரப்பு திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல்வி நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில்  மகிந்தவின் முட்டாள்தனமான  செயற்பாடுகளில் இதுவும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நூறு நாட்கள் போதாது,115 நாட்களில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பேன்: ஆர்.எ.சிறிசேன
ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்திருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியாகும் சில தினசரி பத்திரிகைகளில் சிறிசேன என்ற பெயரில் கொடி சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒருவரின் விளம்பரம் பிரசுரமாகியிருந்தது.
பார்ப்பதற்கு மைத்திரிபால சிறிசேன போன்று தோற்றமளிக்கும் ஒருவரின் புகைப்படத்தையும் அதில் கொடி சின்னத்தையும் குறித்த விளம்பரம் தாங்கியிருப்பதுடன் நான் சொல்வதெல்லாம் உண்மை. மாற்றம் செய்வதற்கு 100நாட்கள் போதாது, நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை உட்பட அனைத்தையும் மாற்றுவதற்கு எனக்கு 115 நாட்கள் வேண்டும் எனவும் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
வரலாறு தெரியாமல் ஆபிரிக்காவின் காந்தி எனவும், இந்தியாவின் நெல்சன் மண்டேலா எனவும் அதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த விளம்பரம் யார் கொடுத்தார்கள், குறித்த வேட்பாளர் எங்கே போட்டியிடுகின்றார், எதற்காக வடக்கு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு விடையில்லை. ஆனாலும் இது குழப்பத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதென கூறப்படுகின்றது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila