550 கைதிகள் விடுதலை! அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை!

இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகள் 550 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளிலிருந்து 10 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இதன்படி, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 கைதிகள் இன்று புதன்கிழமை விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்கள் புரிந்தவர்கள், நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்த முடியாது சிறையில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் 7 கைதிகள் வவுனியா சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று யாழ்.சிறைச்சாலையிலிருந்த 3 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவருமே விடுவிக்கப்பட்டிருக்கவில்லை.இன்று புதிய அரசினால் அடையாளமாகவேனும் எவராவது விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவ்வாறு எவரும் விடுவிக்கப்படவில்லை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila