போர்க்குற்றத்தை விசாரணை செய்ய வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை: நியூயோர்க் டைம்ஸ்

இலங்கையை புதிய நம்பிக்கையுடன் இட்டு செல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுப்பதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதக்காலத்துக்கு முன்னர் சர்வதிகாரத்தை தோற்கடித்து, ஊழல்களை ஒழிக்கும் வகையில் எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை இலங்கை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.
இந்தநிலையில் பழைய காயங்களை அவருடைய அரசாங்கம் உடனடியாக திறக்க விரும்பவில்லை.
இதனை கருத்திற்கொண்டே எதிர்வரும் மார்ச்சில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்படவுள்ள இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை காலம் தாமதிக்க கோருவதாக நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம், படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்து தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் குடியியல் ஆளுநர் ஒருவரை வடக்குக்கு நியமித்துள்ளது.
எனினும் மைத்திரிபாலவின் அரசாங்கம் பழைய விடயங்களை உரிய முறையில் கையாள வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் அறிக்கை வெளியிடல் தாமதம் குறுகிய காலத்தை கொண்டதாக இருக்க வேண்டும்.
போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும். இதன்மூலம் சுயாதீனமான விசாரணை ஒன்றுக்கு வழி செய்வதுடன், சாட்சிகள் பாதுகாக்கப்பட்டு குற்றவாளிகள் இறுதியில் தண்டிக்கப்பட வேண்டும் என்று நியூயோர்க் டைம்ஸ் கோரியுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila