ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!- சோபித தேரர்

பல வருடங்களாக ஊதி கடும் சிரமப்பட்டு ரொட்டியை சுடுவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரொட்டி கல்லை சூடாக்கி கொடுத்ததாகவும் அடுப்பின் அருகில் இருந்து குளிர்காய்வதற்காக அல்ல எனவும் நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 7 சுதந்திர மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது, 17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது, தேர்தல் முறையில் திருத்தம் என்பவற்றை பதவிக்கு வந்து 6 மாதங்களில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் யோசனை முன்வைத்த போது, அவற்றை 100 நாட்களில் செய்ய முடியும் என்று மைத்திரிபால சிறிசேனவே கூறினார்.
எனவே ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.
தேசிய நிறைவேற்றுச் சபையின் கூட்டத்தில் ஏன் கலந்து கொள்வதில்லை என சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
தேசிய நிறைவேற்றுச் சபைக்கு நான் நியமிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகிய போதிலும் நியமனக் கடிதமோ, கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்போ இதுவரை விடுக்கப்படவில்லை எனவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila