வவுணதீவில் முன்னாள் போராளிகள் விசேட அதிரடிப்படையினரால் கடும் சோதனை!

வவுணதீவில் முன்னாள் போராளிகளின் வீடு வீடாகச் சென்று விசேட அதிரடிப்படையினர் தேடுதல் மற்றும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுணதீவு வாவிக்கருகேயுள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் அண்மையில் இரு பொலிஸார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கடற்படையினருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினர் மட்டக்களப்பு வவுணதீவு வாவிப் பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தேடுதல் நடவடிக்கையின்போது முன்னாள் போராளிகளின் பட்டியலிலுள்ளவர்கள் குறித்த முகவரியில் தற்போதும் வசிக்கின்றார்களா? அல்லது தொழில் புரியும் இடங்களின் சரியான விவரங்களையும் தருமாறு வீட்டிலிருப்போர் கேட்டுக் கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வவுணதீவில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான இராஜநாயகம் சர்வானந்தம் என்ற 48 வயது நபர் விசாரணைகளுக்காக மட்டக்களப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார் என்றும் அவர் மூலம் பல விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila